அப்பாவின் மரணத்திற்கு துக்கம் அனுஷ்டிக்காமல் கொண்டாடிய லட்சுமிராமகிருஷ்ணன்.. ஏன் தெரியுமா?
லட்சுமி ராமகிருஷ்ணனின் தந்தை காலமானார்.
Recommended Video

சென்னை: தன் தந்தையின் மரணத்திற்கு துக்கம் அனுஷ்டிக்காமல், அவரின் வாழ்க்கையைக் கொண்டாடுவதாகக் கூறி இருக்கிறார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
தமிழில் குணச்சித்திர நடிகையாக பல படங்களில் நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். தனியார் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இந்நிகழ்ச்சி பல சர்ச்சைகளை சந்தித்தது. அவருக்கு கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியது.

இந்த நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி கூறும், 'என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா' என்ற வசனம் இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது. நடிகையாக மட்டுமின்றி இவர் ஆரோகணம் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது, இவர் ஹவுஸ்புல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணனின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன் காலமானார். 97 வயதான அவரது மரணத்தின் மூலம், மீண்டும் அவரது குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் லட்சுமி ராமகிருஷணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் அம்மா, அக்கா மற்றும் அண்ணா ஆகியோருடன் மீண்டும் சேர்வதற்காக எனது தந்தை சொர்க்கம் சென்று விட்டார். அவர் 97 வயது இளமையான, உறுதியான மனிதர். அவரது வாழ்க்கை ரோலர் கோஸ்டர் பயணம் போல் ஏற்ற இறக்கங்களுடன் இருந்தாலும், அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. என்ன மாதிரியான மனிதர் அவர். நாங்கள் அவருடைய இழப்பிற்காக துக்கம் அனுஷ்டிக்கவில்லை, கொண்டாட்டத்தில் இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











