Don't Miss!
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
'இந்தியன் 2' படத்துக்கு வசனம் யார் தெரியுமா.. சுஜாதா இடத்தை நிரப்பமுடியுமா?
Recommended Video
சென்னை : கமல் தனது அரசியல் பிரவேசத்திற்கு பிறகு நடிக்கவிருக்கும் முதல் படம் 'இந்தியன் 2'. அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளதால் அவர் நடிக்கும் கடைசி படமும் இதுவாகக் கூட இருக்கலாம்.
இயக்குநர் ஷங்கர் 'இந்தியன் 2' படத்திற்கான லொக்கேஷன்களை தேடி வருகிறார். படத்திற்கான ஷூட்டிங் ஆகஸ்டில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. 'இந்தியன் '2' படத்திற்கு எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் வசனம் எழுதவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில சிறுகதை தொகுப்புகளையும், 'உப்பு நாய்கள்', 'கானகன்', 'கொமோரா' ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார் லக்ஷ்மி சரவணகுமார். இவர், எழுதிய 'கானகன்' நாவலுக்கு 2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
இயக்குனர் வசந்தபாலனிடம் உதவி இயக்குனராக இருந்த லக்ஷ்மி சரவணகுமார், 'காவியத் தலைவன்', 'அரவான்' படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்திருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் வெளியாக இருக்கும், '2.O' திரைப்படத்தில் மேக்கிங் ஆஃப் எந்திரன் 2.O-வை எழுத்து வடிவில் எழுதியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'இந்தியன் 2' படத்தில் வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் லக்ஷ்மி சரவணகுமார். இந்தப் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன், கபிலன் வரைமுத்து ஆகியோரும் வசனம் எழுதுகிறார்கள்.
'இந்தியன்' முதல் பாகம் முதல் 'எந்திரன்' வரை ஷங்கர் படங்களுக்கு வசனம் எழுதியது எழுத்தாளர் சுஜாதா. அவரது வசனங்கள் பலருக்கும் செம ஃபேவரிட். 'இந்தியன்' படத்தில் நினைவுகூரத்தக்க வசனங்கள் பல இடம்பெற்றிருந்தன.
உருவாகவிருக்கும் 'இந்தியன் 2' படத்தில் மூன்று பேர் வசனம் எழுதினாலும், சுஜாதா இடத்தை நிரப்ப முடியுமா என்பது சமூக வலைதளங்களில் பலர் எழுப்பும் கேள்வி. படம் வெளியாகும்போதுதான் இதற்கு விடை தெரியும்.