Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
துன்புறுத்தப்பட்ட நடிகைக்கு பக்க பலமாக நின்ற இயக்குநர்!
கடத்தல், பாலியல் தொல்லைக்கு ஆளான பாவனாவுக்கு இக்கட்டான நேரத்தில் பக்க பலமாய் இருந்து போலீஸ் நடவடிக்கை எடுக்க உதவி செய்துள்ளார் நடிகரும் இயக்குநருமான லால்.
லால் தமிழில் 'சண்டைக்கோழி', 'தீபாவளி' உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர். தீபாவளி' படத்தில் நடிகை பாவனாவுக்கு அவர் தந்தையாக நடித்திருந்தார்.
பாவனா தன்னிடம் உதவி கேட்டு வந்த சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "இது ஒரு மோசமான, மனிதத் தன்மையற்ற சம்பவம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்று இரவு எனது வீட்டிற்கு வந்து தனக்கு நடந்த கொடுமைப் பற்றி பாவனா கூறியபோது அதிர்ந்து போனேன். இதுபற்றி கேரள டி.ஜி.பி.யைத் தொடர்பு கொண்டு புகார் செய்தேன். அவர் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளை எனது வீட்டிற்கு அனுப்பி நடவடிக்கை எடுத்தார்.
மறுநாள் இந்த சம்பவம் பற்றி ஊடகங்களில் தகவல் வெளியானது. இதனால் பாவனா மிகவும் மனவேதனை அடைந்தார். புகாரை வாபஸ் வாங்கி விடலாம் என்றுகூட நினைத்தார். ஆனால் அவரிடம் போலீஸ் டி.ஜி.பி. இதுபோல 3 சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் யாரும் புகார் கொடுக்கவில்லை. இந்த புகார் மூலம் உங்களுக்கு சிக்கல் வராது.. குற்றவாளிகளையும் பிடித்து தண்டிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
இதன்பிறகே அவர் சமாதானமடைந்தார். இந்த கொடிய செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாவனாவுக்கு முழுப் பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்," என்றார்.