Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
துன்புறுத்தப்பட்ட நடிகைக்கு பக்க பலமாக நின்ற இயக்குநர்!
கடத்தல், பாலியல் தொல்லைக்கு ஆளான பாவனாவுக்கு இக்கட்டான நேரத்தில் பக்க பலமாய் இருந்து போலீஸ் நடவடிக்கை எடுக்க உதவி செய்துள்ளார் நடிகரும் இயக்குநருமான லால்.
லால் தமிழில் 'சண்டைக்கோழி', 'தீபாவளி' உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர். தீபாவளி' படத்தில் நடிகை பாவனாவுக்கு அவர் தந்தையாக நடித்திருந்தார்.
பாவனா தன்னிடம் உதவி கேட்டு வந்த சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "இது ஒரு மோசமான, மனிதத் தன்மையற்ற சம்பவம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்று இரவு எனது வீட்டிற்கு வந்து தனக்கு நடந்த கொடுமைப் பற்றி பாவனா கூறியபோது அதிர்ந்து போனேன். இதுபற்றி கேரள டி.ஜி.பி.யைத் தொடர்பு கொண்டு புகார் செய்தேன். அவர் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளை எனது வீட்டிற்கு அனுப்பி நடவடிக்கை எடுத்தார்.
மறுநாள் இந்த சம்பவம் பற்றி ஊடகங்களில் தகவல் வெளியானது. இதனால் பாவனா மிகவும் மனவேதனை அடைந்தார். புகாரை வாபஸ் வாங்கி விடலாம் என்றுகூட நினைத்தார். ஆனால் அவரிடம் போலீஸ் டி.ஜி.பி. இதுபோல 3 சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் யாரும் புகார் கொடுக்கவில்லை. இந்த புகார் மூலம் உங்களுக்கு சிக்கல் வராது.. குற்றவாளிகளையும் பிடித்து தண்டிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
இதன்பிறகே அவர் சமாதானமடைந்தார். இந்த கொடிய செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாவனாவுக்கு முழுப் பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்," என்றார்.