Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எனக்கு தமிழ் தெரியாதது எவ்வளவு நல்லது தெரியுமா?: சுவாரஸ்ய விஷயம் சொன்ன அதிதி
சென்ன: தனக்கு தமிழ் தெரியாதது நல்லதாகப் போச்சு என்று அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அதிதி அரவிந்த்சாமியுடன் மேடைக்கு வந்து பேசினார்.
அதிதி
மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தை அடுத்து செக்கச் சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார் அதிதி. காற்று வெளியிடை ரிலீஸான போதே மீண்டும் மணி சார் இயக்கத்தில் நடிக்க ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்தார் அதிதி. அதை மனதில் வைத்து தன்னுடைய அடுத்த படத்திலும் அதிதிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் மணிரத்னம். சும்மா சொல்லக் கூடாது காற்று வெளியிடை படத்தில் அதிதி தனது நடிப்பால் அசத்தியிருந்தார்.
இந்தி
இந்திக்கார பெண்ணான அதிதி தமிழ் கற்றுக் கொண்டுள்ளார். முழுமையாக பேச முடியாவிட்டாலும் அவரின் முயற்சியை பாராட்ட வேண்டும். எத்தனையோ நடிகைகள் பல ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடித்தும் மொழியை கற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் 3 படங்களில் நடித்துள்ள அதிதி இந்த அளவுக்கு தமிழ் பேசுவதை பாராட்டியே ஆக வேண்டும்.
மொழி
தமிழ் மொழி சரியாக தெரியாததால் மணி சாருடன் அதிக நேரம் செலவிட முடிந்தது என்று செக்கச் சிவந்த வானம் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார் அதிதி. மணி சாரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் படத்தில் மீண்டும் நடித்ததில் மகிழ்ச்சி என்றார். மொழி தெரியாவிட்டாலும் செட்டுக்கு வரும்போது வசனங்கள் எல்லாம் பக்காவாக படித்துவிட்டு வருவார் என்று அதிதியை அரவிந்த்சாமி பாராட்டினார்.
நிறைவேறுமா?
அடுத்தடுத்து மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ள அதிதிக்கு மீண்டும் அவர் படத்தில் நடிக்க வேண்டுமாம். மணிரத்னத்தின் அடுத்த படத்திலும் அதிதிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதிதி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க உள்ளார். சைக்கோ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை மிஷ்கின் இயக்குகிறார்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்