Don't Miss!
- News தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வேட்புமனுதாக்கல் நிறைவு.. 1,749 மனுக்கள் மீது இன்று பரிசீலனை
- Finance என்னது பாம்பு விஷம் மருந்தா..? சீனாவில் விநோத பார்மா துறை உருவானது எப்படி..?
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
லதா மங்கேஷேகர் எனது கணவரின் கள்ளக்காதலி: புபென் ஹசாரிகாவின் மாஜி மனைவி குற்றச்சாட்டு
இந்தி திரையுலகில் பிரபலமாக இருந்து மறைந்தவர் அஸ்ஸாமைச் சேர்ந்த பாடகரும், இசையமைப்பாளருமான புபென் ஹசாரிகா. அவரது முதலாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அவரது முன்னாள் மனைவி பிரியம்வதா பட்டேல் கலந்து கொண்டார்.
அவர் அஸ்ஸாம் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், பாடகி லதா மங்கேஷ்கருக்கும், புபென் ஹசாரிகாவுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததால் தான் திருமணமாகி 13 ஆண்டுகள் கழித்து அவரைப் பிரிந்ததாகத் தெரிவித்துள்ளார். அவரின் குற்றச்சாட்டு மங்கேஷ்கர் குடும்பத்தாரையும், ஹசாரிகாவுடன் 40 ஆண்டுகளாக இருந்த கல்பனா லாஜ்மியையும் எரிச்சலடைய வைத்துள்ளது.
அந்த பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்,
லதா எப்பொழுது கொல்கத்தா வந்தாலும் எங்கள் வீட்டுக்கு வருவார். அப்படி வந்தால் அவரும், ஹசாரிகாவும் இரவு முழுவதும் ஒரே படுக்கையறையில் தான் இருப்பார்கள். லதாவுக்கு அவர் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு இசைக்கலைஞன் முன்னுக்கு வர வேண்டும் என்றால் அவனுடைய பாடல்களை லதா மங்கேஷ்கர் பாட வேண்டும் என்று என் கணவர் ஒரு முறை கூறினார் என்றார்.
ஹசாரிகா வாழ்வில் மும்பையைச் .சேர்ந்த ஒரு பெரிய பிரபலம் இருந்தது அஸ்ஸாம் மாநில மக்களில் பலருக்கு தெரியும். ஆனால் அது பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. ஹசாரிகா தனது சுயரசரிதையில் தனது வாழ்வில் உள்ள இன்னொரு பெண்ணைப் பற்றி எழுதியிருந்தார். ஆனால் அந்த பெண்ணின் பெயரைக் குறிப்பிடவில்லை.