Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லதா மங்கேஷ்கர் வீட்டுக்கு சீல் வைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்.. பாடகி வெளியிட்ட அறிவிப்பு!
மும்பை: பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் வீட்டுக்கு மும்பை சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
அதுதொடர்பாக ஒரு அறிக்கையையும் பாடகி லதா மங்கேஷ்கர் தற்போது வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ரேகா ஆகியோர் பங்களாக்களுக்கு மும்பை சுகாதார அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் சீல் வைத்திருந்தனர்.
இதன் காரணமாக பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பரவியதாக வதந்திகள் வலம் வரத் தொடங்கின.
ஆனால், தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்றும், முன்னெச்சரிக்கை காரணமாகத் தான் தங்களது பிரபுகஞ்ச் இல்லத்திற்கு மும்பை சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
நாங்கள் அனைவரும் நலமாகவே உள்ளோம். வீண் வதந்திகளை யாரும் பரப்பவோ, நம்பவோ வேண்டாம் என 90 வயதை தாண்டிய லதா மங்கேஷ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்தே, தானும் தனது குடும்பமும் சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடித்து வருகிறோம்.
சமீபத்தில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி திருவிழாவை கூட வீட்டிலேயே எளிமையான முறையில் தான் வழிபட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அமிதாப் பச்சன் குடும்பத்தினருக்கும், போனி கபூரின் பணியாளர்களுக்கும், அமீர்கான் வீட்டில் வேலை செய்யும் நபருக்கும் கொரோனா தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.
திடீரென ஏன் லதா மங்கேஷ்கர் வீட்டுக்கு மும்பை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் என்ற கேள்வியும் பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி வருகிறது.