Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
'மாற்றத்தைப் பற்றிப் பேசவேண்டாம், மாற்றத்தை உருவாக்குபவராக இருப்போம்'- லதா ரஜினிகாந்த்
சமூக மாற்றத்துக்காக இந்தியாவிற்காக நான் (I Am For India) என்ற அமைப்பை லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார்.
இதன் தொடக்கவிழா நேற்று சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது. அதையொட்டி வைபவ் என்ற இரண்டு நாள் கண்காட்சியும் மண்டபத்தில் நடந்தது.
ரஜினி பற்றிய புத்தகங்கள்
நிகழ்ச்சியை லதா ரஜினி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியின் சிறப்பம்சமாக, சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி வெளியாகியுள்ள புத்தகங்கள், அவரது உருவம் பொறித்து வெளியிடப்பட்ட கலைப் பொருள்கள் அனைத்தையும் ஒரு தனி பகுதியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஐ ஆம் பார் இந்தியா குறித்து லதா ரஜினிகாந்த் கூறுகையில், "மாற்றத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம், மாற்றத்தை உருவாக்குபவராக இருப்போம் என்கிற வரிகளில் அதிக நம்பிக்கை கொண்டவள் நான். அந்த நம்பிக்கையில்தான் இத்தனை ஆண்டுகளாக பொது வாழ்க்கையிலும் இருந்து, பலதரப்பட்ட மக்களுடன் பழகி வருகிறேன்.
"கல்வி, ஆரோக்கியம்-உடல் நலம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்," ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும், அதுவும் நமது முன்னோர்கள் வாழ்ந்த அந்த உயரிய வாழ்க்கை முறையைத் திரும்பவும் கொண்டு வரவேண்டும் என்கிற தாகம் எனக்கு உண்டு.
தனி நபர்கள், பெரிய நிறுவனங்களில் பணிபுரிவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்கக் கூடியவர்கள் மேலும் தனது வாழ்க்கையிலும் அதன் மூலம் மற்றவர்கள் வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்கள் ஆகியோரின் நலன் கருதி நமது பாரம்பரிய உணவுகள், தொழில்கள் மற்றும் கலைகளை அடிப்படையாகக் கொண்ட வைபவ் மேளா மற்றும் வைபவ் உணவுத் திருவிழா ஆகியவை நடத்தப்படுகிறது.
என் கணவர் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து வெளியான அனைத்துப் புத்தகங்கள், அவரைச் சிறப்பிக்கும் வகையில் வெளியிடப்பட்ட கலைப் பொருள்கள் அனைத்தையும் இங்கே பார்வைக்கு வைத்துள்ளோம்..." என்றார்.