Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ரஜினிக்கு தெரியும்.. எல்லாம் அவர் முடிவுதான்' - லதா ரஜினி
சென்னை: அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது ரஜினிக்கு தெரியும். எல்லாவற்றையும் அவர் முடிவுக்கே விட்டிருக்கிறோம், என்றார் லதா ரஜினி.
கோச்சடையான் படம், ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி:
புது வரலாறு
ஆறு மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கிறது கோச்சடையான். இதை கஷ்டமான செயலாக நான் நினைக்கவில்லை. இப்படம் மூலம் ஒரு வரலாறை நிகழ்த்தி உள்ளோம். இந்திய சினிமாவில் இதற்கு முன் இதுபோல் பார்த்திருக் மாட்டார்கள்.
சவால்
ஹாலிவுட் படமான அவதார் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அந்த அளவு செலவிட்டு நம்மால் படம் எடுக்க முடியாது. ஆனாலும் அந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி செய்துள்ளோம். இதில் நேரம், செலவு ரஜினியை எப்படி காட்டுவது என்பதில் எல்லாம் பெரிய சவால்கள் இருந்தன.
கோச்சடையானுக்கு முன், பின்
இந்த படத்தை எடுப்பது சவுந்தர்யாவுக்கு ஒரு சுமையாகவே இருந்தது. ஆனால் தன் அப்பா மேல் நம்பிக்கை வைத்து எடுத்தார். 100 ஆண்டு இந்திய சினிமாவில் கோச்சடையான் ஒரு மைல்கல் படமாக இருக்கும்.
அமிதாப்பச்சன், ஹாலிவுட் படங்களை அவதார் படத்துக்கு முன்பு பின்பு என்பது போல், இந்திய படங்களை கோச்சடையான் படத்துக்கு முன்பு பின்பு என வகைபடுத்தலாம் என்றார். பெருமையாக உள்ளது.
நல்லா இருக்கார்
ரஜினி உடல் நலம் குன்றி இருந்த போது நிறைய பேர் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்தனர். அதுவே அவரை குணமாக்கியது. கடவுள் அருளால் இப்போது நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார். எப்போதுமே அவர் தன்னை பெரிய ஆளாக நினைத்தது இல்லை. தனது படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் ஒரு மாணவன் போல பதட்டமும் பரபரப்புமாகவே இருப்பார்.
எதைச் செய்ய வேண்டும் என அவருக்கு தெரியும்...
ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று குடும்பத்தினரோடு செலவிடும் முடிவை அவரிடத்திலேயே விட்டுள்ளோம். எதை செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவர் விருப்பம் போல் முடிவு எடுக்கலாம்.
ரஜினி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர். உள் மனது என்ன சொல்கிறதோ அதை செய்வார். ரசிகர்களுடன் உட்கார்ந்து நான் படங்கள் பார்த்துள்ளேன். அவர் பார்த்தது இல்லை. எங்கு போனாலும் அவரது நடையை வைத்து மக்கள் அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.