Don't Miss!
- News தமிழ்நாடு வாக்காள பெருமக்களே.. தாம்பரம், திருநெல்வேலி சிறப்பு ரயிலை மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே பாருங்க
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோச்சடையான் விவகாரம்: லதா ரஜினியின் ரூ. 22 .21 கோடி சொத்தை கையகப்படுத்தியது எக்ஸிம் வங்கி
மும்பை: கோச்சடையான் பட விவகாரம் தொடர்பாக லதா ரஜினிகாந்த் பிணையாக கொடுத்திருந்த ரூ. 22 கோடி சொத்தை எக்ஸிம் வங்கி கையகப்படுத்தியுள்ளது. வங்கியின் அனுமதி இல்லாமல் அந்தச் சொத்தை வாங்கவோ, விற்கவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரஜினி நடித்து அவரது இளைய மகள் சௌந்தர்யா மோஷன் கேப்சர் முறையில் இயக்கிய அனிமேஷன் படம் கோச்சடையான். இப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இப்படம் தொடர்பாக மீடியா ஒன் குளோபல் என்டர்டெயன்மென்ட் தொடர்ந்த வழக்கில் லதா ரஜினி தனக்கு சொந்தமான சொத்தை பிணையாக கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், மும்பையில் உள்ள ரூ. 22 கோடி மதிப்புள்ள இந்த சொத்தை எக்ஸிம் வங்கி கையகப்படுத்தியதாக பத்திரிக்கை மூலம் அறிவித்துள்ளது. அதில், வங்கிக்கு தெரியாமல் இந்த சொத்தை யாரும் வாங்கவோ , விற்கவோ கூடாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் இயக்குநர் முரளி மனோகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், நான்கு நாட்களுக்குள் கடன் தொகைக்கு ஈடான வங்கி உத்தரவாதம் அளிக்கப்படும்' என அவர் தெரிவித்துள்ளார்.