Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அவதூறு பரப்பிய பைனான்சியர் மீது லதா ரஜினி வழக்கு
தன் மீது அவதூறு பரப்பி, வீண் பழி சுமத்தியதாக பைனான்சியர் ஆட் பியூரோ நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் லதா ரஜினிகாந்த்.
கோச்சடையான் படத்துக்காக பெற்ற பணத்தை திரும்பச் செலுத்தவில்லை என லதா ரஜினிகாந்த் மீது ஆட் பியூரா நிறுவனத்தினர் பிரஸ் மீட் வைத்து அண்மையில் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆனால் இந்த நூறுசதவீதம் வட்டி போட்டு மோசடியாக பணம் பறிக்கப் பார்ப்பதாக பதிலுக்கு கோச்சடையான் தயாரிப்பாளரான மீடியா ஒன் நிறுவனம் பதிலளித்திருந்தது.
இந்த நிலையில், ஆட் பியூரோ நிறுவனம் திட்டமிட்டு தன் மீது வீண்பழி சுமத்துவதாகக் கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் லதா.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள லதா ரஜினிகாந்த், "ஆட் பியூராவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும். வீண் பழி சுமத்தி எனக்கு அவப்பெயர் தேடித் தருவதால் மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். எனது பெயரை ஆட் பியூரா கெடுக்கிறது.
கோச்சடையான் படத்திற்காக மீடியா ஒன் நிறுவனத்திற்கு ஆட் பியூரா ரூ.10 கோடி கடன் அளித்தது. ஆனால் அப்போதே ரூ.1.2 கோடி கழித்துக் கொண்டுதான் தந்தது. தொடர்ந்து, ரூ.20 கோடி கடன் கொடுப்பார்கள் என்ற உத்தரவாதத்தில்பேரில்தான் ரூ.2.4 கோடி ஆட் பியூராவுக்கு திரும்ப செலுத்தினோம். ஆனால் அவர்கள் அந்தக் கடனைக் கொடுக்கவில்லை. மேலும் முதலில் வாங்கிய கடனில் ரூ.5.6 கோடி திரும்ப செலுத்துப்பட்டுவிட்டது," என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, லதா ரஜினிகாந்த்துக்கு பதில் அளித்து ஆட் பியூராவைச் சேர்ந்த அபிர்சந்த் நஹார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லதா ரஜினிகாந்த் வாங்கிய ரூ.10 கோடி பணத்தை திரும்பச் செலுத்துவதாக ஆட் பியூரா நிறுவனத்துக்கு உத்தரவாதக் கடிதம் அளித்துள்ளார். செய்து கொண்ட ஒப்பந்தத்தில் மேற்கொண்டு ரூ.20 கோடி தருவது பற்றி எங்கும் நாங்கள் குறிப்பிடவில்லை.
லதா ரஜினிகாந்த் பொய்களைப் பரப்புகிறார். எங்களிடம் அவருக்கு எதிரான ஆவணங்கள் உள்ளன," என்று குறிப்பிட்டுள்ளார்.