twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லலிதா குமாரியின் அண்ணன் மகள் வீடு திரும்பினார்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதா குமாரியின் சகோதரர் மகள் காணாமல் போனதாகp புகார் அளிக்கப்பட்டது.

    லலிதா குமாரியின் அண்ணனும், சினிமா உதவி இயக்குனருமானஅருண் மொழி வர்மனின் மூத்த மகள் அப்ரீனா +2 படிக்கிறார்.

    கடந்த 6-ம் தேதி பள்ளிக்குச் சென்ற அப்ரீனா திரும்ப வரவில்லை. அவர் இப்போது வீடு திரும்பியுள்ளார்.

    போலீசில் புகார் :

    போலீசில் புகார் :

    பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்ததன் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ஆனாலும் அப்ரீனாவை கண்டுபிடிக்க முடியாத சூழல் நிலவியது.

    பள்ளியிலும் விசாரணை :

    பள்ளியிலும் விசாரணை :

    அப்ரீனா படித்த சர்ச் பார்க் பள்ளியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமராக்கள் சில செயல்படாமல் இருந்ததால் அவற்றின் மூலமும் அவர் காணாமல் போனதைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறாமல் போலீசார் திணறினர்.

    லலிதா குமாரி :

    பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி லலிதா குமாரி, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து ஊடகங்களின் உதவியை நாடினார். 'ஊடகங்கள் மூலம் என் அண்ணன் மகள் அப்ரினா கிடைப்பால் என்ற நம்பிக்கை இருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார்.

    காணாமல் போனவர் கிடைத்தார் :

    காணாமல் போன அப்ரீனா கிடைத்துவிட்டார். இது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ், 'எங்கள் குழந்தை திரும்ப வந்துவிட்டாள். உதவிய அனைவருக்கும் நன்றி' என ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். காணவில்லை எனப் பதிவாகியிருந்த ட்வீட் நீக்கப்பட்டிருக்கிறது.

    English summary
    Lalitha Kumari's niece, Abrina, disappeared on the last 6th. Abrina has been available again today, as the police have been searching for seriously.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X