Don't Miss!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ராகவா லாரன்ஸுக்கு ரூ.2.5 கோடி அபராதம் விதித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம்
நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் தெலுங்கில் பிரபாஸ் மற்றும் தமன்னாவை வைத்து ரிபெல் என்ற படத்தை எடுத்தார். லாரன்ஸின் இந்த படத்தால் தாங்கள் நஷ்டம் அடைந்ததாக பகவான், புல்லாராவ் ஆகிய 2 தயாரிப்பாளர்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தனர்.
தங்கள் புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
ரிபெல் படத்தை ரூ.22.5 கோடி பட்ஜெட்டில் எடுத்து தர லாரன்சுடன் ஒப்பந்தம் போட்டோம். ஆனால் அவர் நிர்ணயித்ததைவிட படத்துக்கு அதிகம் செலவு வைத்துவிட்டார். இதனால் எங்களுக்கு ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த பணத்தை லாரன்ஸ் திருப்பி தரவேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் இந்த விவகாரம் குறித்து விசாரிகக் 20 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழு நடத்திய விசாரணையில் லாரன்ஸால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது உறுதியானது.
இதையடுத்து லாரன்ஸ் பகவான் மற்றும் புல்லாராவுக்கு ரூ.2.5 கோடி நஷ்டஈடு வழங்க தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டது. மேலும் அவர் இந்த தொகையை 30 நாட்களுக்குள் கொடுக்காவிட்டால் மொத்த நஷ்டத் தொகையான ரூ.5.5 கோடியையும் அவர் அளிக்க வேண்டும் என்று எச்சரி்க்கை விடுத்துள்ளது.