Don't Miss!
- News தலைகீழாக கட்டி தோலை உரிப்பேன்..என்னது மம்தாவா? வங்கத்தில் கொந்தளித்த அமித் ஷா! இப்படி சொல்லிட்டாரே!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராகவா லாரன்ஸுக்கு ரூ.2.5 கோடி அபராதம் விதித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம்
நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் தெலுங்கில் பிரபாஸ் மற்றும் தமன்னாவை வைத்து ரிபெல் என்ற படத்தை எடுத்தார். லாரன்ஸின் இந்த படத்தால் தாங்கள் நஷ்டம் அடைந்ததாக பகவான், புல்லாராவ் ஆகிய 2 தயாரிப்பாளர்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தனர்.
தங்கள் புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
ரிபெல் படத்தை ரூ.22.5 கோடி பட்ஜெட்டில் எடுத்து தர லாரன்சுடன் ஒப்பந்தம் போட்டோம். ஆனால் அவர் நிர்ணயித்ததைவிட படத்துக்கு அதிகம் செலவு வைத்துவிட்டார். இதனால் எங்களுக்கு ரூ.5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த பணத்தை லாரன்ஸ் திருப்பி தரவேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் இந்த விவகாரம் குறித்து விசாரிகக் 20 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழு நடத்திய விசாரணையில் லாரன்ஸால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது உறுதியானது.
இதையடுத்து லாரன்ஸ் பகவான் மற்றும் புல்லாராவுக்கு ரூ.2.5 கோடி நஷ்டஈடு வழங்க தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டது. மேலும் அவர் இந்த தொகையை 30 நாட்களுக்குள் கொடுக்காவிட்டால் மொத்த நஷ்டத் தொகையான ரூ.5.5 கோடியையும் அவர் அளிக்க வேண்டும் என்று எச்சரி்க்கை விடுத்துள்ளது.