Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்
ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாருக்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ராகவாலாரன்ஸ் பதிலளித்துள்ளனர்.
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாருக்கு ராகவா லாரன்ஸ் மற்றும் ஸ்ரீகாந்த் பதிலளித்துள்ளனர்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ஒருநாளைக்கு ஒரு பிரபலம் என்ற வரிசயையில் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டவர்கள் என நடிகர்கள் இயக்குனர்கள் பெயரை வெளியிட்டு வருகிறார்.
அட என்னம்மா நீ.... சும்மா பேரை மட்டும் வெளியிட்டுகிட்டு இருக்க, சட்டுபுட்டுன்ன்னு சுச்சிக்லீக்ஸ் மாதிரி இந்நேரம் வீடியோவை வெளியிட்டு வைரலாக்க வேண்டாமா என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் தட்டுகின்றனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து பதிவிட்ட ஸ்ரீரெட்டி ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐதராபாத் தி பார்க் ஹோட்டலில், செலிபிரட்டி கிரிக்கெட் லீக் பார்ட்டியில் சந்தித்தது நியாபகம் இருக்கிறதா ஸ்ரீகாந்த்? நீங்க கூட எனக்கு வாய்ப்பு தர்றதா சொல்லி... (பொதுநலன் கருதி அவர் சொன்ன வசங்கள் இங்கே சென்சார் செய்யப்படுகிறது) என்று ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீகாந்த், அவ்வாறு நடந்திருந்தால் ஏன் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அதைக் கூறவேண்டும்? எனக்கு நடிகைகளை சிபாரிசு செய்யும் பழக்கம் கிடையாது என தெரிவித்துள்ளார்.
இதேபோல் ராகவா லாரன்ஸ் பற்றி ட்வீட்டிய நடிகை ஸ்ரீரெட்டி, ஐந்து வருடங்களுக்கு முன்பு கோல்கோண்டா ஹோட்டலில் நண்பர் ஒருவரின் மூலம் லாரன்ஸை சந்தித்ததாகவும், அவர் ஏழை சிறுவர்களுக்கு உதவுவதாக சொன்னதால் வாப்பு தருவார் என நம்பி அவருடன் இணக்கமாக இருந்ததாகவும், அதன்பிறகுதான் அவரின் உண்மை முகம் தெரிந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு பதிலளித்துள்ள லாரன்ஸ், அது முற்றிலும் உண்மையில்லை. தான் தெலுங்கு படங்களுக்கு பணியாற்றியே ஐந்து வருடங்களுக்குமேல் ஆகிறது. நானி, பவன் கல்யாண் போன்ற மரியாதையான நடிகர்கள் மீது அவதூறு பரப்பும் ஸ்ரீரெட்டிக்கு பதிலளிப்பது என்னுடைய மரியாதையை குறைத்துக் கொள்வதாகும் என தெரிவித்துள்ளார்.