Don't Miss!
- News தமிழ்நாடு வாக்காள பெருமக்களே.. தாம்பரம், திருநெல்வேலி சிறப்பு ரயிலை மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே பாருங்க
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'வெள்ளை வேன் கதைகள்'... - லீனா மணிமேகலையின் மனதைப் பதற வைக்கும் படம்!
சென்னை: இலங்கையில் காணாமல் போன பல்லாயிரம் பேர்கள் மற்றும் அவர்களின் கண்ணீர் கதைகளை வெள்ளை வேன் கதைகள் என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார் செங்கடல் படம் தந்த லீனா மணிமேகலை.
எழுத்தாளரும் கவிஞருமான லீனா மணிமேகலை, மாற்று சினிமா முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
ஈழ அகதிகள் படும் துயரங்கள் குறித்த இவரது செங்கடல் உலகெங்கும் பெரும் வரவேற்பையும் விவாதங்களையும் எழுப்பியது. 30க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் பங்கெடுத்த இந்தப் படத்துக்கு விருதுகளும் கிடைத்துள்ளன.
இந்தப் படத்தையடுத்து வெள்ளை வேன் கதைகள் (White Van Stories) என்ற படத்தை இயக்கியுள்ளார் லீனா. இது ஒரு ஆவணப் படம்.
ஆனால், ரத்தமும் கண்ணீரும் தெறிக்கும் ஒரு உயிர்ப்பான படம். மனிதாபிமானத்தை மட்டுமே பிரதானப்படுத்தும் முக்கிய பதிவு.
குற்றங்களில் எல்லாம் கொடிய குற்றமான உயிர்களைக் காணாமல் போகடிக்கும் குற்றத்தை தொடர்ந்து செய்து வரும் இலங்கை அரசாங்கத்தை வெளிப்படுத்தும் படம்.
இலங்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் "காணாமல் போகடிக்கப்பட்ட" தங்கள் உறவுகளுக்காக வருடக்கணக்கில் தேடிக்கொண்டும், காத்திருந்தும் உழல்கின்றனர். கடந்த மூன்று தசாப்தங்களில் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கணக்கின்படி உலக அரங்கில் இலங்கை முதல் இடத்தைப் பிடிப்பதற்கு ஈராக்குடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஐந்து நாளுக்குமொருவர் இலங்கையில் இன்னும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனர்.
சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள், இயக்கப் போராளிகளாக சாட்சியங்களோடு சரண்டைந்தவர்கள், இயக்கத்தால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு போராளிகளாக்கப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள், கார்ட்டூனிஸ்டுகள், பாதிரியார்கள், மெளல்விகள், கலைஞர்கள், கேள்வி கேட்டவர்கள், கேள்வி கேட்காதவர்கள், மாணவர்கள், மீனவர்கள் என காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கதைகளும் காரணங்களும் கொலைகார இலங்கை அரசுக்கு யாரும் தப்பவில்லை என்பதற்கு சாட்சி சொல்கின்றன.
"White Van Stories / வெள்ளை வேன் கதைகள்" காணாமல் போன உறவுகளின் 90 நிமிட விஷுவல் பெட்டிஷன்.
கடுமையான ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் பயணம் செய்ததோடு, முஸ்லீம், சிங்களப் பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்திந்து, கொரில்லா படப்பிடிப்பு நுட்பங்களுடன், உயிராபத்து அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், வெள்ளை வேன் கதைகளை எழுதி இயக்கி தயாரித்திருக்கிறார் லீனா மணிமேகலை.
காமன்வெல்த் மாநாட்டையொட்டி சேனல் ஃஃபோர் தொலைக்காட்சியில் சிறப்பு ஒளிபரப்பை பெற்று,லண்டனில் வெளியிடப்பட்ட இந்தப் படம் முதன்முதலாக இந்தியாவில், சென்னையில் திரையிடப்படுகிறது.
இடம் ஆர்கேவி ப்ரிவியு தியேட்டர், 317 ஜி, என்.எஸ்.கே சாலை (ஆர்காட் ரோடு). (ரஹேஜா கம்ப்ளெக்ஸ் அருகில்), வடபழனி, சென்னை.
நேரம் மாலை 6 -9 மணி. நாள் 12 ஜனவரி 2014
இந்த சிறப்புத் திரையிடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லக்கண்ணு வருகிறார்.
மேலும் தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளான இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, வெற்றி மாறன், வசந்த், ராதா மோகன், எடிட்டர் லெனின், எழுத்தாளர் சி மோகன், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், பத்திரிகையாளர் மாலன், பாலபாரதி எம்எல்ஏ, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, ஓவியா, இயக்குநர் ஆர்வி ரமணி, இயக்குநர் அமுதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.