Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மோசடி வழக்கில் நடிகை லீனா மரியா பால் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: பல கோடி மோசடி வழக்கில் நடிகை லீனா மரியா பாலுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கனரா வங்கியில் ரூ.19 கோடி மற்றும் இன்னொரு வங்கியில் ரூ 75 லட்சம் பணத்தை மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா மரியா பால் கைது செய்யப்பட்டார். இந்த மோசடிகளை அரங்கேற்றிய அவரது காதலன் சுகாஷ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
லீனாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அனைத்து மோசடிகளையும் சுகாஷ்தான் செய்தார் என்றும், தனக்கு நடிகை ஆசை காட்டி ஆசை நாயகியாக வைத்திருந்தார் என்றும் கூறிவிட்டார்.
இப்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லீனா மரியா தனக்கு ஜாமீன் கேட்டு திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
புதன்கிழமை இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. அரசு தரப்பில் வழக்குரைஞர் வி.ஆர்.ராம்குமார் ஆஜராயினார். லீனா மரியா தரப்பில் வழக்குரைஞர் ஜான் சத்யா ஆஜராயினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி முகம்மது ஜபருல்லாகான், நடிகை லீனா மரியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.