Don't Miss!
- News லண்டன் தெருவில்.. ரத்தம் சொட்ட சொட்ட பாய்ந்த 2 குதிரைகள்.. பக்கிங்ஹாம் அரண்மனை கிட்ட ஒரே பரபரப்பு
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
சென்னை கொண்டு வரப்பட்டார் லீனா மரியா பால்... மருத்துவமனையில் கர்ப்பப் பரிசோதனை!
சென்னை: ரூ 19 கோடி மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நடிகை லீனா மரியா பால், இன்று காலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.
அவர் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னையில் 2 வங்கிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் பாலாஜி என்கிற சுகாஷ் சந்திரசேகரை போலீசார் தேடி வந்தனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பெங்களூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் என்று கூறி பல மோசடிகளை அரங்கேற்றியுள்ளார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்தும் இவர் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ 19 கோடி மற்றும் சேலையூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.72 லட்சம் கடன் வாங்கி சுகாஷ் மோசடி செய்துள்ளார்.
இந்த மோசடிகளில் நடிகை லீனா மரியா பாலுக்கும் தொடர்பிருப்பது பின்னர் தெரியவந்ததும் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இருவரும் டெல்லியில் அசோகா பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இணை கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில், உதவி கமிஷனர் வசுந்தரா தேவி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
கடந்த 28-ந் தேதி டெல்லியில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த நடிகை லீனாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அங்கு அதிரடி சோதனை நடத்தி 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
லீனாவுடன் தங்கியிருந்த அவரது காதலன் சுகாஷ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
கைதான லீனாவை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக டெல்லியில் இருந்து போலீசார் இன்று காலை சென்னைக்கு அழைத்து வந்தனர். காலை 7.15 மணி அளவில் தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
சுடிதார் அணிந்திருந்த அவர், ரெயிலில் இருந்து இறங்கும் போது போலீசாருடன் சாதாரண பயணி போலவே இறங்கினார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான போட்டோகிராபர்களும், டி.வி. கேமராமேன்களும் அவரை படம் பிடிக்க நெருங்கினர்.
உடனடியாக அவர் துப்பட்டாவால் தனது முகத்தை மூடிக் கொண்டார். பின்னர் போலீசார் பத்திரமாக அவரை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். எழும்பூரில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
ஏற்கெனவே டெல்லி நீதிமன்றத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக லீனா கூறியதால்,. இன்று அரசு மருத்துவமனையில் லீனா கர்ப்ப சோதனை நடத்தப்பட்டது.
இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார்.
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!