Don't Miss!
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரஜினிக்கே ரெட் கார்டு போட்டவர்... பிரபல திரைப்பட விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் காலமானார்!
ரஜினிக்கே ரெட் கார்டு போட்ட பிரபல திரைப்பட விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் காலமானார்.
சென்னை: பிரபல திரைப்பட விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் சென்னையில் இன்று காலமானார்.
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்தின் மூலம் விநியோகஸ்தராக திரையுலகில் நுழைந்தவர் சிந்தாமணி முருகேசன். விநியோகஸ்தர்கள் என்பவர் யார் ? அவர்களுடைய பவர் என்ன என்பதை திரைத்துறையினருக்கு காட்டியவர் அவர்.
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து பல படங்களை அவர் விநியோகித்தார். சென்னை, செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு 16 முறை தலைவராக பொறுப்பு வகித்தவர்.
சிந்தாமணி முருகேசன் பற்றிய பல தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஒரு காலத்தில் நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் அலறவிட்டவர். அதில் மிக முக்கியமானது ரஜினிக்கு ரெட் கார்டு போட்டது.
உழைப்பாளி படத்துக்கு சம்பளத்துக்கு பதிலாக ஒரு ஏரியாவின் விநியோக உரிமையை ரஜினி கேட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த படத்திற்கு ரெட் கார்டு போட்டார் முருகேசன். அந்த சமயத்தில் இது தான் நாளிதழ்களின் தலைப்பு செய்தி.
கமல் உள்ளிட்டோர் அறிக்கைப் போர் நடத்தியும் கொஞ்சமும் இறங்கி வரவில்லை சிந்தாமணி முருகேசன். கடைசியாக வேறு வழியே இல்லாமல், ரஜினியே விநியோகஸ்தர் சங்க அலுவலகத்துக்கு நேரில் சென்று சமாதானம் பேசினார். அதன் பிறகு உழைப்பாளி படம் மீதான தடையை நீக்கினார் அவர்.
இப்படிப்பட்ட சிந்தாமணி முருகேசன் இன்று காலமாகிவிட்டார். 80 வயதான அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். வயோதிகத்தின் காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. மாலையில் ஈமச்சடங்குகள் நடைபெற்று, சிந்தாமணி முருகேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.