Don't Miss!
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஜினிக்கே ரெட் கார்டு போட்டவர்... பிரபல திரைப்பட விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் காலமானார்!
ரஜினிக்கே ரெட் கார்டு போட்ட பிரபல திரைப்பட விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் காலமானார்.
சென்னை: பிரபல திரைப்பட விநியோகஸ்தர் சிந்தாமணி முருகேசன் சென்னையில் இன்று காலமானார்.
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்தின் மூலம் விநியோகஸ்தராக திரையுலகில் நுழைந்தவர் சிந்தாமணி முருகேசன். விநியோகஸ்தர்கள் என்பவர் யார் ? அவர்களுடைய பவர் என்ன என்பதை திரைத்துறையினருக்கு காட்டியவர் அவர்.
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து பல படங்களை அவர் விநியோகித்தார். சென்னை, செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு 16 முறை தலைவராக பொறுப்பு வகித்தவர்.
சிந்தாமணி முருகேசன் பற்றிய பல தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஒரு காலத்தில் நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் அலறவிட்டவர். அதில் மிக முக்கியமானது ரஜினிக்கு ரெட் கார்டு போட்டது.
உழைப்பாளி படத்துக்கு சம்பளத்துக்கு பதிலாக ஒரு ஏரியாவின் விநியோக உரிமையை ரஜினி கேட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த படத்திற்கு ரெட் கார்டு போட்டார் முருகேசன். அந்த சமயத்தில் இது தான் நாளிதழ்களின் தலைப்பு செய்தி.
கமல் உள்ளிட்டோர் அறிக்கைப் போர் நடத்தியும் கொஞ்சமும் இறங்கி வரவில்லை சிந்தாமணி முருகேசன். கடைசியாக வேறு வழியே இல்லாமல், ரஜினியே விநியோகஸ்தர் சங்க அலுவலகத்துக்கு நேரில் சென்று சமாதானம் பேசினார். அதன் பிறகு உழைப்பாளி படம் மீதான தடையை நீக்கினார் அவர்.
இப்படிப்பட்ட சிந்தாமணி முருகேசன் இன்று காலமாகிவிட்டார். 80 வயதான அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். வயோதிகத்தின் காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. மாலையில் ஈமச்சடங்குகள் நடைபெற்று, சிந்தாமணி முருகேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.