Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போராட்டத்தில் குதித்த எடிட்டர் லெனின் தமிழகத்தின் பிரபல திரைப்பட எடிட்டரும், மறைந்த இயக்குனர் பீம்சிங்கின் மகனுமான பி.லெனின் சென்னை திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் திடீர் மெளன விரதப் போராட்டத்தில் குதித்தார். தென்னிந்தியாவின் முன்னணி எடிட்டர்களில் லெனின் முதலிடத்தில் இருப்பவர். இவரும், எடிட்டர் வி.டி.விஜயனும் சேர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு எடிட்டர்களாக இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் தீவிர சமூக சிந்தனையாளரான லெனின் பல மாறுபட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய நாக் அவுட் குறும்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றவர். இந் நிலையில் நேற்று திரைப்பட வர்த்தக சபைக்கு வந்த லெனின் திடீரென மெளன விரதப் போராட்டத்தில் குதித்தார். எதற்காக இந்தப் போராட்டம் என்று கேட்டபோது, அவருடன் அமர்ந்திருந்த லெனினின் நண்பர் கூறியதாவது: குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கான மானியத் தொகையை பெறத் தகுதியாக, அந்தப் படம் குறைந்தபட்சம் 8 பிரதிகள் போடப்பட்டிருக்க வேண்டும் என தமிழக அரசு விதிமுறையை வைத்துள்ளது. இது தேவையில்லாத, நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு விதிமுறை. இத்தனை பிரிண்ட் எடுக்க வசதி இருந்தால் அந்தத் தயாரிப்பாளருக்கு மானியமே தேவையில்லையே? எனவே ஒரு பிரிண்ட் எடுக்கப்பட்டிருந்தால் கூட அப்படத்திற்கு மானியத் தொகையை வழங்கக் கோரித்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் என்றார் லெனினின் நண்பர். லெனின் இயக்கியுள்ள றெக்கை என்ற படத்துக்கு சமீபத்தில் தமிழக அரசு விருது அறிவித்தது. ஆனால், அப்படம் ஒரு பிரிண்ட் மட்டுமே போடப்பட்டிருந்ததால், அரசின் மானிய உதவி கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்துதான் லெனின் போராட்டத்தில் குதித்தார். காலை முதல் சொட்டு நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தில் அமர்ந்த லெனின் மாலை 6 மணியளவில் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். ஒரு நல்ல கலைஞனின் நியாயமான கோரிக்கை, ஜால்ரா சத்தங்களுக்கு இடையே, தமிழக அரசின் காதுகளில் விழுமா?
தமிழகத்தின் பிரபல திரைப்பட எடிட்டரும், மறைந்த இயக்குனர் பீம்சிங்கின் மகனுமான பி.லெனின் சென்னை திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் திடீர் மெளன விரதப் போராட்டத்தில் குதித்தார்.
தென்னிந்தியாவின் முன்னணி எடிட்டர்களில் லெனின் முதலிடத்தில் இருப்பவர். இவரும், எடிட்டர் வி.டி.விஜயனும் சேர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு எடிட்டர்களாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.
மேலும் தீவிர சமூக சிந்தனையாளரான லெனின் பல மாறுபட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய நாக் அவுட் குறும்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றவர்.
இந் நிலையில் நேற்று திரைப்பட வர்த்தக சபைக்கு வந்த லெனின் திடீரென மெளன விரதப் போராட்டத்தில் குதித்தார்.
எதற்காக இந்தப் போராட்டம் என்று கேட்டபோது, அவருடன் அமர்ந்திருந்த லெனினின் நண்பர் கூறியதாவது:
குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கான மானியத் தொகையை பெறத் தகுதியாக, அந்தப் படம் குறைந்தபட்சம் 8 பிரதிகள் போடப்பட்டிருக்க வேண்டும் என தமிழக அரசு விதிமுறையை வைத்துள்ளது.
இது தேவையில்லாத, நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு விதிமுறை. இத்தனை பிரிண்ட் எடுக்க வசதி இருந்தால் அந்தத் தயாரிப்பாளருக்கு மானியமே தேவையில்லையே?
எனவே ஒரு பிரிண்ட் எடுக்கப்பட்டிருந்தால் கூட அப்படத்திற்கு மானியத் தொகையை வழங்கக் கோரித்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் என்றார் லெனினின் நண்பர்.
லெனின் இயக்கியுள்ள றெக்கை என்ற படத்துக்கு சமீபத்தில் தமிழக அரசு விருது அறிவித்தது. ஆனால், அப்படம் ஒரு பிரிண்ட் மட்டுமே போடப்பட்டிருந்ததால், அரசின் மானிய உதவி கிடைக்கவில்லை.
இதனால் கோபமடைந்துதான் லெனின் போராட்டத்தில் குதித்தார். காலை முதல் சொட்டு நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தில் அமர்ந்த லெனின் மாலை 6 மணியளவில் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
ஒரு நல்ல கலைஞனின் நியாயமான கோரிக்கை, ஜால்ரா சத்தங்களுக்கு இடையே, தமிழக அரசின் காதுகளில் விழுமா?