Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நடிகர் சங்க தலைவர் பதவிக்குப் போட்டி... ஜெயசுதாவுக்கு கொலை மிரட்டல்
தெலுங்கு நடிகர் சங்க தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நடிகை ஜெயசுதாவுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்தத் தேர்தல் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதாவுடன் நடிகர் ராஜேந்திரபிரசாத் மோதுகிறார்.
ஏற்கனவே தலைவராக இருந்த நடிகர் முரளிமோகன் தெலுங்குதேசம் கட்சி சார்பில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதால் போட்டியில் இருந்து விலகி விட்டார்.
அவர் ஜெயசுதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ராஜேந்திர பிரசாத்துக்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரு அணியினரும் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் போட்டியில் இருந்து வாபஸ் பெறும்படி ஜெயசுதாவுக்கு மிரட்டல் வந்துள்ளதாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் 43 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். ராஜேந்திரபிரசாத், முரளிமோகன் போன்றோர் வயதில் எனக்கு மூத்தவர்களாக இருக்கலாம். ஆனால் சினிமாவில் நான்தான் சீனியர்.
அவர்களுக்கு முன்பே நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன். தெலுங்கு நடிகர் சங்கத்தை உருவாக்கியதிலிருந்து அதில் உறுப்பினராக இருக்கிறேன். துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளேன்.
தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதால் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. போட்டியிலிருந்து விலகும்படி அரசியல்வாதிகள் மிரட்டுகிறார்கள்.
இந்த மிரட்டல்களுக்கு பயப்படமாட்டேன். மிரட்டலுக்கு பிறகு தேர்தலில் இன்னும் தீவிரமாகி விட்டேன். நலிந்த நடிகர்- நடிகைகளுக்கு உதவிகள் செய்யவும், அரசிடம் இருந்து சலுகைகள் பெற்றுத்தரவும்தான் தேர்தலில் நிற்கிறேன். நிச்சயம் வெற்றி பெறுவேன்," என்றார்.
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்