Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ரம்லத்துக்கு கொலை மிரட்டல்!!
நயன்தாரா - பிரபு தேவா கள்ளக் காதலை எதிர்த்தும், கணவனை தன்னோடு சேர்த்து வைக்கக் கோரியும் மனைவி ரம்லத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபு தேவாவின் சொத்துக்களை விற்க தடையும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு வரும் நவம்பர் 23-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்மன் அனுப்பப்பட்டும், அதில் பிரபுதேவாவும் நயன்தாராவும் ஆஜராகவில்லை.
எனவே அவர்களுக்கு இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 23-ம் தேதி இருவரும் ஆஜராவார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இருவரும் வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்துள்ள ரம்லத்துக்கும் அவரது வழக்கறிஞருக்கும் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கடிதம் எங்கிருந்து, யாரால் அனுப்பப்பட்டது என்று தெரியவில்லை. எனவே இந்தக் கடிதத்தை சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரம்லத்தின் வழக்கறிஞர் ஒப்படைத்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.