Don't Miss!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
மம்முட்டி - மோகன்லாலை விமர்சித்ததால் திலகனுக்கு கொலை மிரட்டல்!
சிறந்த நடிப்புக்காக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர் மலையாள நடிகர் திலகன். நிறைய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.
மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் மீது நடிகர் திலகன் சில புகார்களை தெரிவித்தார். இதனால் மலையாள நடிகர்கள் சங்கம், இதுபற்றி பதில் அளிக்குமாறு திலகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் திலகன் நேற்று ஆலப்புழாவில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்த போது, அவருடைய செல்போனுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர்கள், 'இனிமேலும் சூப்பர் ஸ்டார்களுக்கு எதிராக பேசினால், ஒரு வாரத்திற்குள் உன்னை கொன்று விடுவோம்', என்று சொல்லிவிட்டு போனை துண்டித்து விட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், போனில் பேசிய மர்ம நபர்கள் சவுதி அரேபியாவில் இருந்து பேசியது தெரியவந்தது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் நடிகர்களை விமர்சித்ததால், திலகனுக்கு பட வாய்ப்புகளை முழுமையாக நிறுத்தி விட்டது மலையாளத் திரையுலகம் என்பது குறிப்பிடத்தக்கது.