கே பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
சென்னை: இயக்குநர் கே பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
மழைத்துளி என்னும் சமூக அமைப்பு இந்த விருதினை வழங்குகிறது.
இது தொடர்பாக ரெய்ன் டிராப்ஸ் சமுக் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
"கடந்த பல ஆண்டுகளாக சினிமா உலகில் அளப்பறிய பங்களிப்பை ஆற்றிவரும் இயக்குநர் கே பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது வழங்கும் விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மற்றும் மனோரமா ஆகியோருடன் தமிழ் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான ஆர்.அஸ்வின் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில்" மாற்றம் தேடி 'be the change-2014' என்ற ஆண்டு நாட்காட்டியை உலக எய்ட்ஸ் தினத்தில் வெளியிடப்படுகிறது.
இந்த நாட்காட்டியில் சாதனையாளர்களை பற்றிய தகவல்களும் சிறந்த சமூக கருத்துகளும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி நிதி குறித்த விவரங்களும் அடங்கியிருக்கும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











