Don't Miss!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தெலுங்கு 'லிங்கா' மீது ஆந்திரத்து ரசிகர்கள் அதிருப்தி!
ஹைதராபாத்: லிங்கா தெலுங்குப் பதிப்புக்கு ரசிகர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளதால் படத்தின் தேவையற்ற நீளப் பகுதிகளை வெட்ட வேண்டிய கட்டாயம் லிங்கா தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள லிங்கா படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்தப் படத்திற்கு முதல் நாள் கிடைத்த வரவேற்பு அடுத்த நாளே சற்று குறைந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன.
முதல் நாளில் அரங்குகள் நிரம்பி வழிந்தன. முதல் நாள் மட்டும் ஆந்திரா, தெலுங்கானாவில் லிங்கா ரூ. 5 கோடியைத் தாண்டி வசூலித்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும் 2வது நாள் வசூலில் பாதிப்பு காணப்பட்டதாம். இதற்குக் காரணம், படம் நீளமாக இருக்கிறது, பிளாஷ்பேக் காட்சிகள் நீளமாக உள்ளதாக எழுந்த அதிருப்தியே என்று சொல்கிறார்கள்.
டிசம்பர் 12ம் தேதி தமிழகத்தில் வெளியான அதே நாள்தான் ஆந்திரா, தெலுங்கானாவிலும் லிங்கா திரைக்கு வந்தது. முதல் நாள் நல்ல வசூல் கிடைத்தது. மேலும் அடுத்து வந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் தொய்வு விழுந்து விட்டதாம்.
படம் நீளமாக இருப்பதாக வந்த விமர்சனங்களும் இதற்கு முக்கியக் காரணம். குறிப்பாக பட இயக்குநரும், எடிட்டரும் படத்தின் 2ம் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சியை நீளமாக வைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதல் நாளில் ரூ. 5 கோடிக்கு கிடைத்த வசூல், 2வது நாளான சனிக்கிழமை ரூ. 4 கோடியாக குறைந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் தமிழகத்தில் லிங்கா தொடர்ந்து பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறதாம். வெளிநாடுகளிலும் கூட வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 37 கோடியும், 2வது நாள் ரூ. 33 கோடியும் வசூலாகியுள்ளது. 2 நாட்களிலேயே தோராயமாக ரூ. 70 கோடியை அது வசூலித்துள்ளதால், தயாரிப்பாளர் தரப்பு உற்சாகமடைந்துள்ளது.
அனேகமாக நேற்று இரவுக்குள் லிங்கா ஒட்டுமொத்தமாக ரூ. 100 கோடி இலக்கைத் தொட்டிருக்கும் என்றும் நம்பப்படுகிறது.