Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இறுதி செட்டில்மென்ட்.. முடிவுக்கு வருகிறது லிங்கா விவகாரம்!
ரஜினி நடித்த லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு கோரி வந்த திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நாளை இறுதி செட்டில்மென்ட் நடக்கும் எனத் தெரிகிறது.
இத்தோடு லிங்கா பிரச்சினை முடிவுக்கு வருகிறது.
லிங்கா படம் வெளியாகி, பெரிய அளவில் ஓபனிங் வசூலைக் குவித்தாலும், அளவுக்கு அதிகமான விலைக்கு விற்கப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கணக்கு காட்டினார்கள்.
இது தொடர்பாக பல கட்டப் போராட்டங்கள், தினசரி பிரஸ் மீட்டுகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் ரூ 12.5 கோடியை விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தர ரஜினியின் பரிந்துரையின்பேரில் தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார்.
அந்தத் தொகையில் பாதியை மட்டும் ஒரு பிரிவினருக்கு கடந்த மாதம் தந்தனர். மீதியை பிறகு தருவதாகக் கூறிய நிலையில், அதை உடனே தரவேண்டும் என்றும், மேலும் ஒரு பெரிய தொகை வேண்டும் என்றும் மீண்டும் கோஷம் போட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், முன்பு பேசிய ஒப்பந்தம் போடப்பட்டபடி ரூ 12.5 கோடியில், தரப்படாமலிருந்த மீதித் தொகையை நாளை விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், கலைப்புலி தாணு முன்னிலையில் பிரித்துத் தருவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செட்டில்மென்ட்டுக்குப் பிறகு லிங்கா விவகாரம் முழுமையாக முற்றுப் பெறும்.
சிங்காரவேலனுக்கு தடை
இன்னொரு பக்கம், லிங்கா விவகாரத்தை இத்தனை மோசமான பிரச்சினையாக்கியது மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரை மிரட்டியது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், லிங்கா விநியோகஸ்தர் சிங்கார வேலனுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை என தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட கூட்டமைப்பு ஆகியவை முடிவு செய்துள்ளன. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ளனர்.