Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
லிங்கா கதை வழக்கு... வக்கீல் ஆணையமெல்லாம் அமைக்க முடியாது!- நீதிமன்றம்
மதுரை: ரஜினி நடித்த லிங்கா மற்றும் முல்லைவனம் 999 படக் கதைகளை ஆய்வு செய்ய வக்கீல்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
லிங்கா திரைப்படத்தின் கதை வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த இரு திரைப்படங்களின் கதைகளையும் ஆய்வு செய்ய 10 வக்கீல்கள் அடங்கிய ஆணையம் அமைக்க வேண்டும் என முல்லைவனம் 999 படத்தின் இயக்குநர் ரவிரத்தினம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி விஸ்வநாத் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லிங்கா திரைப்படக் குழுத் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், இந்த வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் இயக்குநர் ரவிரத்தினம் தொடர்ந்து ஒவ்வொரு மனுக்களாக தாக்கல் செய்து வருகிறார். இதனால், நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
இதைப் பதிவு செய்த நீதிபதி, இயக்குநர் ரவிரத்தினம் தரப்பில் வக்கீல் ஆணையம் அமைக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, மனு மீதான விசாரணையை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.