Don't Miss!
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
ஜூலையில் தொடங்கவுள்ள #RaPo19 படப்பிடிப்பு.. மீண்டெழுவாரா லிங்குசாமி!?
சென்னை: முன்பொரு காலத்தில் தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவரும் வகையில் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி.
கடந்த இரண்டு ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த லிங்குசாமி தற்போது மீண்டும் இயக்க முன் வந்துள்ளார்.
தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து லிங்குசாமி தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.
லிங்குசாமி படத்தில் நான் வில்லனா... உண்மையை போட்டுடைத்த மாதவன்
நல்ல வரவேற்பு
தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகரான ராம் பொத்தினேனி கடைசியாக தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். தடம் படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை போல தெலுங்கிலும் கிடைத்தது. அதை தொடர்ந்து லிங்குசாமி உடன் இணைந்துள்ளார் ராம் பொத்தினெனி.
சிறந்த இயக்குனர்
ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்தவர் லிங்குசாமி. அதன் பின் லிங்குசாமி இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் சோபிக்க தவறி தோல்வி அடைந்தது. பழைய ட்ராகுக்கு திரும்ப ஒரு வெற்றி படம் லிங்குசாமிக்கு தேவைப்படுகிறது.
இரண்டு மொழிகள்
இதனால் ராம் பொத்தினெனியை வைத்து லிங்குசாமி இயக்கவுள்ள படம் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆக்ஷன் படமாக தயாராகும் இது தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவரவுள்ளது. க்ரித்தி ஷெட்டியும் இந்த படத்தில் நடிக்கிறார். வேறு யாரெல்லாம் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்கள் என்ற அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
கொரோனா தொற்று
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக முடங்கி கிடந்த படப்பிடிப்பு பணிகள் தற்போது மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஜூலை மாத தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.