Don't Miss!
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜூலையில் தொடங்கவுள்ள #RaPo19 படப்பிடிப்பு.. மீண்டெழுவாரா லிங்குசாமி!?
சென்னை: முன்பொரு காலத்தில் தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவரும் வகையில் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி.
கடந்த இரண்டு ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த லிங்குசாமி தற்போது மீண்டும் இயக்க முன் வந்துள்ளார்.
தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து லிங்குசாமி தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.
லிங்குசாமி படத்தில் நான் வில்லனா... உண்மையை போட்டுடைத்த மாதவன்
நல்ல வரவேற்பு
தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகரான ராம் பொத்தினேனி கடைசியாக தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். தடம் படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை போல தெலுங்கிலும் கிடைத்தது. அதை தொடர்ந்து லிங்குசாமி உடன் இணைந்துள்ளார் ராம் பொத்தினெனி.
சிறந்த இயக்குனர்
ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்தவர் லிங்குசாமி. அதன் பின் லிங்குசாமி இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் சோபிக்க தவறி தோல்வி அடைந்தது. பழைய ட்ராகுக்கு திரும்ப ஒரு வெற்றி படம் லிங்குசாமிக்கு தேவைப்படுகிறது.
இரண்டு மொழிகள்
இதனால் ராம் பொத்தினெனியை வைத்து லிங்குசாமி இயக்கவுள்ள படம் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆக்ஷன் படமாக தயாராகும் இது தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவரவுள்ளது. க்ரித்தி ஷெட்டியும் இந்த படத்தில் நடிக்கிறார். வேறு யாரெல்லாம் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்கள் என்ற அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
கொரோனா தொற்று
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக முடங்கி கிடந்த படப்பிடிப்பு பணிகள் தற்போது மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஜூலை மாத தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.