Don't Miss!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கல்கி, பொய், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தமவில்லன்... நடிப்பிலும் அசத்திய கே.பி.!
சென்னை: காலத்தால் அழியாத திரைக் காவியங்கள் பலவற்றைத் தந்த பாலசந்தர், சில படங்களில் தனது நடிப்புத் திறமையையும் நிரூபித்துள்ளார்.
இயக்குநர் சிகரம் என அனைவராலும் அழைக்கப்பட்ட கே.பாலசந்தர் நேற்று காலமானார். அவருக்கு வயது 84. அன்னாரது உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. தலைவர்கள் மற்றும் கலைஞர்கள் பாலசந்தரின் மறைவுக்கு தங்களது இரங்கல்களை நேரிலும், சமூகவலைதளங்களிலும் தெரிவித்து வருகின்றனர்.
இவரது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் சுமார் 101 படங்கள் வெளிவந்துள்ளன. 1965ம் ஆண்டு நீர்க்குமிழி படம் மூலம் தனது இயக்குநர் பயணத்தைத் தொடங்கிய பாலசந்தர், கடைசியாக இயக்கிய படம் பொய்.
இயக்குநராக மற்ற நடிகர், நடிகைகளை இயக்கியது மட்டுமின்றி, தானும் சில தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் சினிமாவிலும் நடித்துள்ளார்.
நடிகராக...
கல்கி, பொய், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தம வில்லன் போன்ற படங்கள் பாலசந்தரை நடிகராக ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்தியது.
இயக்குநராகவே...
கல்கி படத்தில் மருத்துவமனைக் காட்சி ஒன்றில் இயக்குநராகவே நடித்திருப்பார் கே.பாலசந்தர். இதே போல், உத்தமவில்லன் படத்திலும் அவர் இயக்குநராகவே நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ரெட்டைச்சுழி...
இவற்றிற்கு மாறாக ரெட்டைச்சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் இணைந்து முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் பாலசந்தர். படம் முழுவதும் வரும் இவரது கதாபாத்திரம்.
தாத்தா...
ரெட்டைச்சுழி படத்தில் குழந்தைகளின் தாத்தாவாக இவரும் பாரதிராஜாவும் நடித்திருந்தது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.