Don't Miss!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கணவனை மாற்றிக் கொள்ளும் கதையில் நடிப்பதா... - நயன்தாராவுக்கு கண்டனம்
நயன்தாரா நடிக்கும் 'ராஜாராணி' படத்தில் கலாச்சார சீரழிவுக்கு துணைபோகும் கதையமைப்பு உள்ளதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளது இந்து மக்கள் கட்சி அமைப்பு.
'ராஜாராணி' படத்தில் ஒருவர் மனைவியை இன்னொருவர் மணப்பது போல் காட்சிகள் உள்ளன. ஜெய் நயன்தாராவைக் காதலிக்கிறார். ஆர்யா இன்னொரு பெண்ணை விரும்புகிறார். ஆனால் சூழ்நிலை ஜெய் காதலியான நயன்தாராவை ஆர்யாவுக்கு மனைவியாக்குகிறது. ஆர்யா காதலியை ஜெய் மணந்து கொள்கிறார்.
திருமணத்துக்கு பிறகு உண்மை தெரிந்து இருவரும் காதலிகளை பண்டமாற்று முறையில் மாற்றிக் கொள்வது போல் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இன்னொருத்தனை காதலித்து இருந்தாலும் தாலி கட்டியவனை கணவனாக ஏற்பதுதான் மரபு.
இயக்குனர் பாக்யராஜ் 'அந்த 7 நாட்கள்' படத்தில் இதைதான் பதிவு செய்து இருந்தார். ஆனால் 'ராஜாராணி' படத்தில் மனைவிகளை காதலர்கள் மாற்றிக் கொள்வது பண்பாட்டுக்கு விரோதமானது. 'ரமணா' படம் மூலம் சமூக அவலங்களை சாடிய ஏ.ஆர்.முருகதாஸ் 'ராஜாராணி' படத்தை தயாரிப்பது முறையில்லை. இதை கைவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.