அடுத்தடுத்து 5 படங்கள்.. அதுவும் மாஸ் நடிகர்கள்.. பிஸியான பிரபல இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: பிரபல இயக்குநர் முன்னணி இயக்குநர்களை வைத்து அடுத்தடுத்து 5 படங்களை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் நடைபெறும் சுவாரசியமான மற்றும் முக்கிய சம்பவங்கள் குறித்த தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்தவகையில் இன்றைய டாப் 5 பீட்டிஸிலும் பல சுவாரசியமான தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

அதாவது இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து ரஜினி, விஜய், கார்த்தி என முன்னணி நடிகர்களை வைத்து 5 படங்களை இயக்கவுள்ளதாக கூறியிருக்கிறார் பிகே. அதனை தொடர்ந்து, எஸ்எஸ் ராஜமவுலி படத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளது குறித்தும் கூறியிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அருண் விஜயின் வா டீல் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது குறித்த தகவலையும் வழங்கியிருக்கிறார் பிகே. இதேபோல் இயக்குநர் அட்லி, ஜெயம் ரவியை வைத்து படம் இயக்க உள்ள தகவலையும் கூறியிருக்கிறார் பிகே.


Click it and Unblock the Notifications











