Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'லூஸ்' மோகனுடன் சமரசமானது மகன் குடும்பம்!
தற்போது 84 வயதாகும் காமெடி நடிகர் லூஸ் மோகன் சமீபத்தில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். கூடுதல் ஆணையர் அபய் குமார் சிங்கை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தனக்கு அத்தனை வசதிகளும் இருந்தும் தனது மகன் தனக்கு சாப்பாடு போடாமல் மனைவி பேச்சைக் கேட்டு புறக்கணிப்பதாக கூறியிருந்தார். ஒரு வேளை சாப்பிடக் கூட வழியில்லாத நிலையில் தான் இருப்பதாகவும், மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மருமகள் மீதும் அவர் சட்ட நடவடிக்கை கோரியிருந்தார்.
இதையடுத்து கமிஷனர் அலுவலகத்தில் அவருக்கு டீ, பிஸ்கட் உள்ளிட்டவற்றைக் கொடுத்து உபசரித்து ஆயாசப்படுத்தினர். அதன் பிறகுதான் லூஸ் மோகன் பசியமர்ந்தார். மேலும் அவர் கொடுத்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மயிலாப்பூர் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பறந்தது.
இதையடுத்து மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் உடனடி விசாரணையில் இறங்கினார். லூஸ் மோகன், அவரது மகன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், லூஸ் மோகன் ஒரு அறிக்கை விட்டுள்ளார். அதில், கடந்த 20ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் என் மகன் மீது புகார் கொடுத்திருந்தேன். இன்று நான் என் குடும்பத்தினருடன் சுமூகமாக சேர்ந்து விட்டேன். எனவே, அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மயிலாப்பூர் இன்ஸ்பெக்டரிடம் புகாரை வாபஸ் பெற்றுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இத்தனை காலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிறு வலிக்க சிரிக்க வைத்து ஆயுளின் நாளை கூட்ட உதவிய லூஸ் மோகனை இனிமேலாவது அவரது குடும்பத்தினர், ஒரு குழந்தையைப் போல கருதி பத்திரமாக பார்த்துக் கொள்ளட்டும்.