ரசிகரை கட்டிப்பிடித்த லாஸ்லியா.. ஏன் தெரியுமா? வைரலாகும் வீடியோ!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா தனக்கு பரிசு கொடுத்த ரசிகரை கட்டிப்பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தார்.
இதனால் மக்களின் அன்புக்கும் பாசத்துக்கும் ஆளானார். ஆனால் எப்போது கவினை காதலிக்க தொடங்கினாரோ அப்போதே மக்களின் வெறுப்புக்கு ஆளாகி விட்டார்.

எதிர்ப்பும் ஆதரவும்
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கவினை காதலித்து வந்தார் லாஸ்லியா. கவின் லாஸ்லியா காதலுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பும் ஆதரவும் ஒரு சேர இருந்து வருகிறது.

கால் வைக்காத
கவினும் லாஸ்லியாவும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் அவர்களின் ஆர்மியினர் வேண்டி விரும்பி வருகின்றனர். அதேநேரத்தில் லாஸ்லியா தமிழ் நாட்டுக்குள் காலே வைக்கக்கூடாது திரும்பிப்போயிவிடு என சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எதுவும் பேசவில்லை
கவினை காதலித்து தனது பெயரை கெடுத்துக்கொண்டார் லாஸ்லியா என்ற கருத்தே நிலவி வருகிறது. இதனை உணர்ந்த லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு கவின் குறித்து எதுவும் பேசவில்லை.

கட்டிப்பிடித்த லாஸ்லியா
இதில் கலந்துகொண்ட லாஸ்லியாவிடம் அவருடைய தீவிர ரசிகர் தனது கையால் வரைந்த லாஸ்லியாவின் படத்தை அவரிடம் கொடுத்தார். இதனை பார்த்த லாஸ்லியா, அந்த ரசிகரை பாராட்டியதோடு, அவரை கட்டிப்பிடித்து வீடியோவுக்கு போஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











