Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் லாஸ்லியாவிடம் பேசினேன்.. உடைந்து போயிருக்கிறார்.. கதறுகிறார்.. வனிதா அதிர்ச்சி தகவல்!
சென்னை: தான் இப்போதுதான் லாஸ்லியாவிடம் பேசியதாக வனிதா பதிவிட்டுள்ள டிவிட் அவரது ரசிகர்களை சற்று ஆறுதல்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. அதன் மூலம் பெரும் பிரபலமான லாஸ்லியா, தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
லாஸ்லியா பிக்பாஸில் பங்கேற்றதன் மூலம் அவரது தந்தையான மரியநேசனும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார்.
கனடாவில் மரணம்
கனடாவில் பணிபுரிந்து வரும் மரியநேசன், நேற்று திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. லாஸ்லியா தந்தையின் மறைவுக்கு ரசிகர்களும் பிக்பாஸ் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வனிதா டிவிட்
மரியநேசனின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்களில் ஒருவரான வனிதா, லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மறைவு குறித்து டிவிட்டியுள்ளார்.
ரொம்ப வருத்தமாக உள்ளது
அவரது மறைவு கொடூரமானது என்றும் இதயத்தை நொறுக்கி விட்டது என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், கொடூரமான செய்தியைக் கேட்டது வருத்தமாக இருக்கிறது... இதை அவர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை...
உடலையாவது..
குறிப்பாக அவர்தான் அந்த வீட்டில் முக்கியமாக வருமானம் ஈட்டுபவர். அவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மிகவும் உடைந்து போய்விட்டேன்.. வாழ்க்கை மிகவும் கணிக்க முடியாதது.. பயமாக இருக்கிறது... இந்த நேரத்தில் அவர்கள் குறைந்தபட்சம் அவரது உடலையாவது மீண்டும் கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.. என பதிவிட்டிருந்தார்.
அழுது கொண்டே இருக்கிறார்
வனிதாவின் மற்றொரு பதிவில், லாஸ்லியாவின் அனைத்து ரசிகர்களுக்கும், நான் லாஸ்லியாவுடன் சற்றுமுன் பேசினேன் என்றும் அவர் நொறுங்கி போயிருக்கிறார். அழுது கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் மன உறுதியுடன் இருப்பார், அவர் இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
உடல் உடனே வரமுடியாது
தூதரகம் மூலம் செல்ல விஜய் டிவி குழு அவருடன் இருந்து ஏற்பாடு செய்து வருகிறது. கோவிட் தொற்றுநோய் காரணமாக உடல் உடனடியாக ஸ்ரீலங்காவை அடைய முடியாது. லாஸ்லியாவுக்கு என் அன்பையும் ஆசீர்வாதங்களையும் கொடுக்கிறேன்.
ஏதாவது நடக்கும்..
அபிராமியுடனும் மற்ற சில ஹவுஸ்மெட்ஸுடனும் பேசினேன். பிக்பாஸ் 3 ஹவுஸ்மெட்ஸ் அவருடன் டச்சில் உள்ளனர். அவர் பயணத்துக்கான உதவிகளையும் ஆதரவையும் வழங்கியுள்ளோம். ஏதாவது நடக்கும் என்று நம்புகிறேன்... கடவுள் அவளுடன் இருப்பார்