படத்தில் அம்மா, நிஜத்தில் படு கிளாமர்.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த லப்பர் பந்து நடிகை!
சென்னை: அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சுவாசிகா. அந்த படத்தில் தினேஷூக்கு மனைவியாகவும் திருமண வயதில் இருக்கும் பெண்ணுக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார். ஆனால், நிஜத்தில் ஹீரோயின் போல இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

எர்ணாகுளத்தில் பிறந்தவரான நடிகை சுவாசிகா 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வைகை என்ற திரைப்படத்தில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் விசாகா என்ற பெயரில் அறிமுகமானார். விசாகா என்ற பெயர் ராசி இல்லாததால், சிவாசிகா என்ற பெயரில் கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு தமிழில் படம் இல்லாததால் மலையாள சினிமா பக்கம் சென்றார்.

லப்பர் பந்து: மலையாளத்தில் அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த இவர் மீண்டும் தமிழுக்கு வந்து, தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான லப்பர் பந்து படத்தில் நடித்தார். அந்த படத்தில், அட்டக்கத்தி தினேஷூக்கு மனைவியாக நடித்திருந்தார். படத்தில் மற்றொரு நடிகை சஞ்சனா நடித்திருந்தாலும், நடிகை சுவாசிகாவிற்கு தான் அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. படம் ஆரம்பிக்கும் போதே, கணவர் தினேஷ், கிரிக்கெட் விளையாடுவது பிடிக்காததால், இந்த மைதானத்திற்கே வந்து சிவாசிகா, டிராக்டரை ஓட்டி மொத்த மைதானத்தையும் நாசமாக்கும் சும்மா அட்டகாசமாக இருக்கும். அந்த ஒரே காட்சியிலே மொத்த கைத்தட்டலையும் பெற்று விட்டார் சிவாசிகா. 'லப்பர் பந்து' படத்தின் மூலம் தமிழில் முதல் வெற்றியை ருசித்து சிவாசிகா கடந்த ஜனவரி மாதம் பிரேம் ஜேக்கப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சீரியல் ஒன்றில் இணைந்து பணியாற்றியபோது காதலித்து பின்னர் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

நீச்சல் உடையில்: இந்நிலையில், இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் சிவாசிகா, சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய லப்பர் பந்து படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், மாலத்தீவுக்கு சுற்றுலான சென்றுள்ளார். அங்கு நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் படத்தில் தான் அம்மா... நிஜத்தில் ஹீரோயினுக்கே சவால் விடுவார் போல என கருத்துக்களை பகிர்ந்து அந்த போட்டோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

வழக்குப்பதிவு: சுவாசிகா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், மலையாள சினிமாவில் பெரும் புயலை கிளப்பிய ஹேமா தலைமையில் ஒரு கமிட்டியில் புகார் அளித்த நடிகையை பற்றிய சர்ச்சை கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஹேமா கமிஷனில் அந்த நடிகை புகார் அளித்ததை தொடர்ந்து, சுவாசிகா, பீனா ஆண்டணி மற்றும் நடிகர் மனோஜ் ஆகியோர் மீது நெடும்பாசேரி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











