Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஷங்கருக்கு லைகா வைத்த அடுத்த 'செக்'... முற்றுகிறது இந்தியன் 2 விவகாரம்
சென்னை : இந்தியன் 2 படம் தொடர்பாக லைகா நிறுவனம் மற்றும் டைரக்டர் ஷங்கர் இடையேயான விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கோர்ட்டிற்கு சென்றும் இந்த விவகாரம் முடிவுக்கு வராமல், மெகா சீரியல் போல் தொடர்கிறது.
ஷாக்.. பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை.. உடம்பில் காயங்கள்.. நடிகர் மீது பெற்றோர் புகார்!
இந்தியன் 2 தொடர்ந்து தாமதமானதால் தெலுங்கில் ராம் சர ணின் 15 வது படம் மற்றும் அந்நியன் இந்தி ரீமேக்கை இயக்க போவதாக ஷங்கர் அறிவித்தார். இதனால் கோர்ட்டிற்கு சென்ற லைகா, இந்தியன் 2 படத்தை முடிக்காமல் ஷங்கர் மற்ற படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டது.
சமரச முயற்சி தோல்வி
முதலில் இருதரப்பும் சமரச பேச்சில் ஈடுபடவே கோர்ட் அறிவுறுத்தியது. ஆனால் சமரச பேச்சு தோல்வியில் முடிந்தது. இந்த விவகாரத்தில் கமல், சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்க போவதாக கூறப்பட்டது. அதிலும் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
ஷங்கர் பதில் மனு தாக்கல்
இதற்கிடையில், இந்தியன் 2 தாமதத்திற்கு லைகா நிறுவனம் தான் முக்கிய காரணம் என ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கமலுக்கு மேக் அப்பில் ஏற்பட்ட அலர்ஜி, கிரைன் விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தது, கொரோனா ஊரடங்கு ஆகியவற்றால் தான் இந்தியன் 2 தாமதமானதே தவிர, தன்னால் தாமதம் ஏற்படவில்லை என ஷங்கர் தரப்பில் கூறப்பட்டது.
மேல்முறையீடு செய்த லைகா
இதனால் ஷங்கரின் வாதத்தை ஏற்ற கோர்ட், அவருக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதனால் ஷங்கர் மற்ற படங்களை இயக்க தடை கேட்டு, லைகா மேல்முறையீடு செய்துள்ளது. ஷங்கர் மற்ற படங்களை இயக்குவதை தடுப்பதற்காக சட்ட ரீதியாக மட்டுமின்றி, அதைத் தாண்டி பல விதங்களிலும் லைகா நிறுவனம் ஷங்கருக்கு 'செக்' வைத்து வருகிறது.
Recommended Video
ஷங்கருக்கு லைகாவின் 'செக்'
அதில் ஒன்றாக, லைகா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்பட சங்கங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், இந்தியன் 2 படத்தை முடிக்கும் வரை மற்ற படங்களை ஷங்கர் இயக்க அனுமதிக்கக் கூடாது என அந்த கடிதத்தில் லைகா நிறுவனம் சார்பில் கேட்கப்பட்டுள்ளது.