Don't Miss!
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- News தங்கமான தங்கைக்கு திருமண பரிசு கொடுக்க ஆசைப்பட்ட அண்ணன்.. அடித்தே கொன்ற மனைவி
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கண்ணீரில் டெல்டா.. அள்ளிக் கொடுத்த லைகா... ரூ. 1,01,00,000 நிவாரண நிதி!
கஜா புயல் நிவாரண நிதிக்காக லைகா ரூ. ஒரு கோடி வழங்கியுள்ளது.
Recommended Video
சென்னை: கஜா புயல் நிவாரண நிதியாக லைகா நிறுவனம் ரூ. ஒரு கோடியும், இயக்குநர் ஷங்கர் ரூ. 10 லட்சமும் வழங்கியுள்ளனர்.
கடந்த வாரம் வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அங்குள்ள மக்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு திரையுலகைக் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் ரஜினி ரூ. 50 லட்சம், விஜய் சேதுபதி ரூ. 25 லட்சம், சூர்யா குடும்பம் ரூ. 50 லட்சம் என திரையுலக பிரபலங்கள் பலர் தொடர்ந்து நிவாரண நிதியும், நிவாரணப் பொருட்களும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திக்கேயன் கஜா நிவாரண நிதிக்காக ரூ. 10 லட்சம் அளித்துள்ளார். கூடவே, ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களையும் புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதேபோல், கஜா புயல் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக, முதலமைச்சர் நிவாரணநிதிக்கு ரூ.1 கோடியே ஒரு லட்சத்தை லைகா நிறுவனம் வழங்கியுள்ளது. இயக்குனர் ஷங்கரும் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ. 10 லட்சத்தை அளித்துள்ளார்.
பாடலாசிரியர் வைரமுத்துவும் ரூ. 5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். அதோடு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியை விரைவாக செய்யுங்கள் என டிவிட்டர் வாயிலாக அவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்.