Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
செலவில் கறார் காட்டும் லைக்கா… இதுக்கெல்லாமா கணக்கு பார்ப்பது… கடுப்பான வடிவேலு !
சென்னை : வைகை புயல் வடிவேலுவுக்கு கம்பேக் திரைப்படமாக இருக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் வரவு செலவு கணக்கில் லைக்கா நிறுவனம் கறார் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதனால், வடிவேலு ஏகத்திற்கும் டென்ஷனாகி தாட்பூட் என கத்தியுள்ளார்.
இப்படத்தில் ரெடின் கிங்ஸ்ஸி , முனிஸ்காந்த் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர்.
செம ஹாட் தான்... வடிவேலு படத்தில் என்ட்ரி கொடுக்கும் ஷிவானி...அதுவும் எப்படி வர போகிறார் தெரியுமா?
நாய்சேகர் ரிட்டன்ஸ்
வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இத்திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வடிவேலு பிரவுதேவா கூட்டணி
இந்த படத்தில் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வடிவேலு மற்றும் பிரபுதேவாவின் ஆரம்ப கால பாடல்கள் மற்றும் நடனம் வெகு பிரசித்தி பெற்றது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் கூட்டணியில் உருவாக உள்ள பாடல் மற்றும் நடனம் மீது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
கடுப்பான லைக்கா
நாய்சேகர் ரிட்டன்ஸ் கதைப்படி வடிவேலு மிகப்பெரிய கோடீஸ்வரராம், இதற்காக மைசூர் அரண்மனையில் முகாமிட்டுள்ள படக்குழு, மாளிகை போன்ற செட் ஒன்றை வீடு போல அமைத்துள்ளனர். இதனால், படத்திற்கு போடப்பட்ட பட்ஜெட்டை மீறி கோடிக்கணக்கில் செலவாகி உள்ளது. இதனால், கடுப்பான லைக்கா நிறுவனம் செலவை குறைத்துக் கொள்ளுமாறு கறாராக படக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
டென்ஷனான வடிவேலு
இந்த தகவலால் டென்ஷனான வடிவேலு, திரையில் நல்ல படம் வரவேண்டும் என்றால் செலவு கூடத்தான் செய்யும், இதுக்கெல்லாமா கணக்கு பார்ப்பதா? என தயாரிப்பு நிறுவனத்திடம் பொங்கி எழுந்துள்ளார் வடிவேலு. தயாரிப்பு நிறுவனத்தின் பஞ்சப்பாட்டால் இயக்குநர் என்ன செய்வதென தெரியாமல் குழம்பிப்போய் உள்ளாராம்.