Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தர்பார் படத்தோட வசூல் எவ்ளோபா.. இந்தா லைகாவே சொல்லிட்டாங்க பாருங்க.. ம்.. பெத்த கலெக்ஷன்தான்!
Recommended Video
சென்னை: தர்பார் படத்தின் வசூல் குறித்து லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெளியான படம் தர்பார். இந்தப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும் வில்லனாக பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டியும் நடித்துள்ளனர். அவர்களை தவிர நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
ரன்வீர் சிங்கின் படத்துக்கு தூதர் ஆன நடிகர் கமல்ஹாசன்... அம்பாசடருக்கும் அளவில்லாத சம்பளமாம்!
|
வெற்றிநடை போடுகிறது
படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்த போதும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும்
தர்பார் படம் உலகம் முழுவதும் 7000 தியோட்டர்களில் ரிலீஸானது. தமிழகத்தில் மட்டும் 4000 தியேட்டர்களில் ரிலீஸானது.
4 நாட்கள் வசூல்
படம் ரிலீஸ் ஆகி 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்து நாள்தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நேற்று வரை படத்தின் வசூல் குறித்து லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரூ.150 கோடி வசூல்
அதன்படி உலகம் முழுவதும் தர்பார் படம் 4 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்திருக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும என்று எதிர்பார்க்கப்படுகிறது.