சமூகசேவையைப் பாராட்டி.. லைகா சுபாஸ்கரனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்.. மலேசிய பல்கலைகழகம் வழங்கியது!
கோலாலம்பூர்: லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரனுக்கு மலேசிய பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. லைக்கா மொபைல் நிறுவனம், ஐரோப்பாவில் இயங்கும் பல தொலைபேசி நிறுவனங்களில் முதல் இடத்தை எட்டியுள்ளது.

இலங்கையின் வட கிழக்கு பகுதில் உள்ள தமிழர்களுக்கு குடியிருக்க நூற்றுக்கணக்கான வீடுகளையும், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு உதவி, விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடி நீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பது என சுபாஷ்கரன், மனிதகுல மேம்பாட்டிற்காக பல தொண்டுகளை ஆற்றிவருகிறார்.
இந்நிலையில் சுபாஷ்கரனின் சமூக சேவையைப் பாராட்டி, மலேசிய ஏம்ய்ஸ்ட் பல்கலைக் கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது.
லைக்கா நிறுவனம் இந்திய சினிமாவிலும் பல பிரமாண்ட படங்களைத் தயாரித்து வருகிறது. ரஜினி நடிப்பில் உருவான 2.0, விரைவில் வெளிவர உள்ள தர்பார் உள்பட பல படங்களை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











