Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பிரிட்டிஷ் மக்களுக்காக அதி நவீன மருத்துவமனைகளைத் திறந்த லைக்கா நிறுவனம்!
லண்டன்: பிரிட்டனில் வாழும் மக்களுக்காக அதி நவீன மருத்துமனைகளைத் திறந்துள்ளது ஈழத் தமிழர் சுபாஷ்கரன் நடத்தி வரும் லைக்கா நிறுவனம்.
தொழிலதிபரும், கத்தி படத் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் அல்லி ராஜா நடத்தி வரும் லைக்கா நிறுவனம் ஆரம்பத்தில் மொபைல் சேவையை மட்டுமே செய்து வந்தது. நாளடைவில் வயர்லெஸ் சேவை, விமான சேவை என பல துறைகளிலும் கால்பதித்தது.
இப்போது மருத்துவத் துறையில் இறங்கியுள்ளது.
லண்டனில் புதிதாக பல நோய்களை துல்லியமாக கண்டறியும் மருத்துவமனைகளை இந்நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இவற்றில் அதி நவீன ஸ்கேனிங் வசதிகள், பல அதி நவீன தொழில் நுட்பம் மிக்க நோயைக் கண்டறியும் பரிசோதனை நிலையங்கள் போன்றவற்றை இந்நிறுவனம் ஆரம்பித்துள்ளனர்.
தரமான நோய் கண்டறியும் அதி நவீன வசதிகளைக் கொண்ட நிலையம் ஒன்று இன்று லண்டனில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. லண்டன் மேயர் பாரிஸ் ஜான்ஸன், லைக்கா குழுமத்தின் சிஇஓ சுபாஷ்கரன் அல்லிராஜா, பிரேம் சிவசாமி, அதி நவீன முறையில் நோய்களை கண்டறியும் நிலையங்களை ஏற்கனவே நடத்தி வரும் ஈழத் தமிழரான சென் கந்தையா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்கள்.
"பிரிட்டனில் உள்ள அனைத்து மக்களுக்கும், தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும். எனவே நோய்களை நாம் முதலில் துல்லியமாகக் கண்டறியவேண்டும். அதற்காகவே இதுபோன்ற நிலையங்களை நாம் ஆரம்பித்து உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார் சுபாஷ்கரன் அல்லிராஜா.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்