Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெயிட் பண்ணுங்க, வேற லெவல் பாட்டு... பாடலாசிரியர் விவேகா ஜில்
சென்னை: ரஜினியின் அடுத்தப் படத்தில், பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என்று பாடலாசிரியர் விவேகா சொன்னார்.
தர்பார் படத்துக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் இன்று தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் நாளை தொடங்க இருக்கிறது.
இந்தப் படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு விவேகா பாடல் எழுதுகிறார். இவர் ஏற்கனவே, பல ஹிட் பாடல்களை எழுதியவர்.
அவரிம் கேட்டபோது, ரஜினியின் அடுத்த படத்துக்குப் பாடல் எழுதி வருகிறேன். கண்டிப்பாக இந்த பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என்றார்.
அவர் மேலும் கூறும்போது, சுமார் 60-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறேன். இப்போது பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வெளிவர இருக்கும், தபாங் 3 படத்துக்கு முழுப் பாடல்களையும் எழுதியுள்ளேன். இந்தப் பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளன.
கார்த்தி நடிக்கும் சுல்தான், ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் சீறு உட்பட பல படங்களுக்கு முழுப் பாடல்களையும் எழுதி வருகிறேன்.
பாடல் என்பது வார்த்தை விளையாட்டு. இந்த சாகச விளையாட்டை விளையாடுவது எனக்குப் பிடித்திருக்கிறது. தொடர்ந்து சிறந்த பாடல்களை எழுத வேண்டும் என்பது என் ஆசை என்றார் விவேகா.