Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பிரபல பாடலாசிரியர் கவிஞர் காமகோடியன் காலமானார்...பிரபலங்கள் இரங்கல்
சென்னை : பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் காமகோடியன் காலமானார். வயது முதிர்வின் காரணமாக காலமான காமகோடியனுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
1980 களின் பிற்பகுதி துவங்கி தமிழ் சினிமாவில் பல படங்களில் பிரபலமான பாடல்களை இவர் எழுதி உள்ளார். சில படங்களுக்கு வசனங்களையும் எழுதி உள்ளார் காமகோடியன். 1990 ல் வாழ்க்கை சக்கரம் படத்திற்காக இவர் எழுதிய பாடல்கள் பிரபலமானதால், பல படங்களில் பாட்டெழுதும் வாய்ப்பை பெற்றன.
21 நாட்கள் புது வாழ்க்கை... ஜோதிகா -சூர்யாவின் வேற லெவல் பிராக்டீஸ்
கண்ணாத்தாள், தொடரும், மெளனம் பேசியதே, மதுமதி, உளியின் ஓசை, மாப்பிள்ளை உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு பாட்டெழுதி உள்ளார். இதில் சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தில் இடம்பெற்ற அன்பே என் அன்பே என் பாடல் மிகவும் பிரபலம். இளைஞர்களின் மனதை கவரும் வகையில் காதல் பாடல்களை எழுதுவதில் கைதேர்ந்தவர் கவிஞர் காமகோடியன்.
இளையராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், யுவன்சங்கர் ராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை இவர் எழுதி உள்ளார்.
2015 ம் ஆண்டு திருட்டு ரயில் என்ற படத்திற்கு ஒரே ஒரு பாட்டெழுதுவதற்காக அழைக்கப்பட்ட காமகோடியன், அந்த பாடல் எதிர்பார்த்ததை விட நன்றாக அமைந்ததால், அந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் எழுதும் வாய்ப்பை பெற்றார்.
இவரின் மறைவிற்காக சோஷியல் மீடியாக்களிலும், நேரிலும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரை பிரபலங்கள் பலர் தங்களின் வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.