Don't Miss!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரபல பாடலாசிரியர் கவிஞர் காமகோடியன் காலமானார்...பிரபலங்கள் இரங்கல்
சென்னை : பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் காமகோடியன் காலமானார். வயது முதிர்வின் காரணமாக காலமான காமகோடியனுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
1980 களின் பிற்பகுதி துவங்கி தமிழ் சினிமாவில் பல படங்களில் பிரபலமான பாடல்களை இவர் எழுதி உள்ளார். சில படங்களுக்கு வசனங்களையும் எழுதி உள்ளார் காமகோடியன். 1990 ல் வாழ்க்கை சக்கரம் படத்திற்காக இவர் எழுதிய பாடல்கள் பிரபலமானதால், பல படங்களில் பாட்டெழுதும் வாய்ப்பை பெற்றன.
21 நாட்கள் புது வாழ்க்கை... ஜோதிகா -சூர்யாவின் வேற லெவல் பிராக்டீஸ்
கண்ணாத்தாள், தொடரும், மெளனம் பேசியதே, மதுமதி, உளியின் ஓசை, மாப்பிள்ளை உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு பாட்டெழுதி உள்ளார். இதில் சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தில் இடம்பெற்ற அன்பே என் அன்பே என் பாடல் மிகவும் பிரபலம். இளைஞர்களின் மனதை கவரும் வகையில் காதல் பாடல்களை எழுதுவதில் கைதேர்ந்தவர் கவிஞர் காமகோடியன்.
இளையராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், யுவன்சங்கர் ராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை இவர் எழுதி உள்ளார்.
2015 ம் ஆண்டு திருட்டு ரயில் என்ற படத்திற்கு ஒரே ஒரு பாட்டெழுதுவதற்காக அழைக்கப்பட்ட காமகோடியன், அந்த பாடல் எதிர்பார்த்ததை விட நன்றாக அமைந்ததால், அந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் எழுதும் வாய்ப்பை பெற்றார்.
இவரின் மறைவிற்காக சோஷியல் மீடியாக்களிலும், நேரிலும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரை பிரபலங்கள் பலர் தங்களின் வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.