Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாடலாசிரியர் கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை
பிரபல பாடலாசிரியர் கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலைக்கான காரணத்தை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை
பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை.
பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் உள்ளது. தற்கொலைக்கான காரணத்தை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆன கபிலன் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியில் வசித்து வருகிறார். புதுச்சேரியில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலிருந்து திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் பாடல்கள் எழுதத் தொடங்கினார். தில் படத்தில் உன் சமையலறையில் பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் கபிலன்.
2014 ஆம் ஆண்டைய யான் திரைப்படத்திற்கு இவர் எழுதிய "ஆத்தங்கர ஓரத்தில்" பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான விஜய் விருதை பெற்றிருக்கிறார். ரஜினியின் காலா, பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை தற்போது வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.
செப்டம்பர் 18ல் ஒளிபரப்பாகும் பொன்னியின் செல்வன் மியூசிக் ரிலீஸ்.. ரஜினி -கமல் பேச்சை கேட்க ரெடியா?
இவரது மகள் தூரிகை, இவர் ஆங்கில கட்டுரைகள் எழுதி வந்தவர். சமீப காலமாக பீஹிங் வுமன் என்கிற ஆங்கில இணையதளத்தை நடத்தி வந்தார், இந்நிலையில் அவரது வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையில் இன்று மாலை திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அவரது தற்கொலை குறித்து அரும்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!