Don't Miss!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
'விழுந்தா கஷ்டம்...' விஜய்யிடம் பாடம்கற்ற பாடலாசிரியர்!
சென்னை : நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்காக நிறைய நல்ல விஷயங்களைக் கூறியிருக்கிறார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் போது ரஜினி ஸ்டைலில் ஒரு குட்டிக் கதை கூறி அதில் இருக்கும் வாழ்க்கைத் தத்துவங்களைக் கூறுவார்.
அவர் கூறும் கதைகளுக்கும், பஞ்ச் டயலாக்குகளுக்கும் ரசிகர்கள் ஆரவாரமெழுப்புவார்கள். அவர் சொன்ன விஷயங்களை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்குவார்கள். இன்னொருபக்கம் அவர் சொன்னதை வைத்தே மீம்ஸ்களும் தெறிக்கும் என்பது வேறு விஷயம்.
சமீபத்தில் கூட மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்காக சில அறிவுரைகளை வழங்கியிருந்தார். எதிர்மறையான விஷயங்களைத் தவிர்த்துவிட வேண்டும் என அவர் சொன்னது வைரல் ஆனது.
இந்நிலையில், 'மெர்சல்' படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் பாடலாசிரியர் விவேக்கிடம் ரசிகர் ஒருவர் 'விஜய்யிடம் இருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்...' என்று ட்விட்டரில் கேட்டுள்ளார்.
Avar kita kathukitadha en mozhi la soldren
— Vivek Lyricist (@Lyricist_Vivek) August 30, 2017
Namma pugazh thaan uyarathuku poganum. Naamalum kuda poga kudadhu. Vizhundha kashtam #StayHumble https://t.co/CJyvVrSNLc
அதற்கு பதிலளித்த விவேக், 'அவரிடம் இருந்து கற்றுக்கொண்டதை என் மொழியில் கூறுகிறேன். நம்ம புகழ் தான் உயரத்துக்குப் போகணும், நாமளும் கூட போக கூடாது, விழுந்தா கஷ்டம்' என ட்வீட் செய்திருக்கிறார். இந்த வாழ்க்கைத் தத்துவத்தை ரீட்வீட் செய்து கொண்டாடி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.