Don't Miss!
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- News நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த ஆண்டும் நா முத்துக்குமார் சாதனை... 33 படங்களில் அவர் பாட்டுதான்!
இந்த 2015-ம் ஆண்டிலும் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் பாடல்கள் எழுதி முன்னணி இடத்தைப் பிடித்துள்ளார் கவிஞர் நா முத்துக்குமார்.
கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக ஆதிக்கம் செலுத்தி வருபவர் நா.முத்துக்குமார். நாட்டின் உயரிய தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார்.
தொடர்ந்து நிறைய படங்களில் அதிக பாடல்களை எழுதி வரும் நா.முத்துக்குமார் 2015-ஆம் ஆண்டில் 33 படங்களில் 94 பாடல்கள் எழுதியுள்ளார். இதில், 9 படங்களுக்கு அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
இதில் பாபநாசம், காக்கிச்சட்டை, பசங்க 2, டார்லிங், விஎஸ்ஓபி உள்ளிட்ட படங்கள் அடங்கும்.
அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் ‘தெறி', ‘சேதுபதி', ‘கோ-2'. ‘தரமணி' உள்ளிட்ட 120 படங்களுக்கும் மேல் பாடல்களை எழுதி வருகிறார்.
இதுகுறித்து நா முத்துக்குமார் கூறுகையில், "2015 ரசிகர்கள் ஆதரவுடன் இந்த ஆண்டு வெற்றிகரமாக அமைந்ததுபோல், அடுத்த ஆண்டும் வெற்றி ஆண்டாக அமையும் என நம்புகிறான். 2015-ல் அதிக பாடல் எழுதியுள்ள இந்த தருணத்தில், எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பாடிய பாடகர்கள், பாடகிகள், சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி," என நா முத்துக்குமார் கூறியுள்ளார்.