Don't Miss!
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- News மகளிர் உரிமை தொகை திட்டத்தில்.. வருகிறது மிகப்பெரிய விதி மாற்றம்? பெண்கள் எதிர்பார்த்த முக்கிய சலுகை
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கட்டை கூத்து கலைஞனாக சிநேகன் நடிக்கும் பொம்மி வீரன் - மண் மணம் மாறாத கதை
சென்னை: கவிஞர் சிநேகன் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருக்கும் பொம்மி வீரன் திரைப்படம் ஒரு கட்டைக்கூத்து கலைஞனின் வாழ்வை, அதன் பல்வேறு பரிமாணங்களை, மண்ணின் மணமும், குணமும், இயல்புகளும் மாறாமல், விவரிக்கும் ஒரு உணர்வு பூர்வமானத் திரைப்படம்.
கவிஞர் சிநேகன் இதற்கு முன்பு உயர்திரு 420 உள்பட சில படங்களில் நடித்திருந்தாலும், ஒன்று கூட சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இருந்தாலும், தமிழ் சினிமாவில் தானும் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற கலை தாகம் மட்டும் அடங்கவில்லை. இதனால் தனது முயற்சியை இன்னும் தொடர்ந்து மேற்கோண்டு வருகிறார்.
அந்த வகையில் கவிஞர் சிநேகன் நடித்திருக்கும் படம் தான் பொம்மி வீரன். உழவன் திரைக்களம் சார்பாக கவிஞர் சினேகன் தயாரித்து, நாயகனாக நடித்திருக்கும் பொம்மி வீரன் படத்தை அறிமுக இயக்குனர் ரமேஷ் மகாராஜன் இயக்குகிறார்.
உழவன் திரைக்களம் சார்பாக கவிஞர் சினேகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், தமிழகத்தின் பழம்பெரும் கலைகளான தெருக்கூத்து, பாவைக்கூத்து போல வெகுவேகமாக அழிந்து வரும் கலையான கட்டைக்கூத்தை மையமாக கொண்டது.
ஒரு கட்டைக்கூத்து கலைஞனின் வாழ்வை, அதன் பல்வேறு பரிமாணங்களை, மண்ணின் மணமும், குணமும், இயல்புகளும் மாறாமல், விவரிக்கும் ஒரு உணர்வு பூர்வமானத் திரைப்படம்.
இப்படத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருக்கும் கவிஞர் சிநேகன், அதற்கென சிறப்பு பயிற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக நடித்திருக்கும் நாட்டியா, இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.
மேலும் இயக்குனர் கே.பாக்யராஜ் ,ஊர்வசி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், முத்துக்காளை, சந்தான பாரதி, போண்டாமணி, இ.ராமதாஸ், டி.பி.கஜேந்திரன், தாரை தப்பட்டை ஆனந்தி, கனிகா மற்றும் பலர் உள்ளிட்ட பல சிறப்பான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.
மலையாளத்தில் முதன்முறையாக மோகன்லால் உடன் ஜோடி சேரும் த்ரிஷா
சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் சுதர்சன் படத்தொகுப்பை கவனித்து இருக்கிறார். தாஜ்நூர் இசையமைக்க, கவிஞர் சிநேகன் பாடல்களையும் எழுதி இருக்கிறார். நிகில் முருகன் மக்கள் தொடர்பை கவனித்துக்கொள்கிறார்.
கலை இயக்குனர் மார்டின் டைட்டஸ் காட்சிகளுக்கு அழகு சேர்க்க, விஜய் ஜாக்குவார் அதிரடி காட்சிகளுக்கு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார். அறிமுக இயக்குனர் ரமேஷ் மகாராஜன் இயக்கத்தில், கவிஞர் சினேகன் தயாரித்து நடித்திருக்கும் பொம்மிவீரன், வெகுவிரைவில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது.